பதிவு செய்த நாள்
17 மார்2017
23:47
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த, பி.எஸ்.என்.எல்., – எம்.என்.டி.எல்., நிறுவனங்களின் இணைப்புக்கு, பார்லி., கோரிக்கை ஆய்வு குழு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
‘பி.எஸ்.என்.எல்., – எம்.என்.டி.எல்., நிறுவனங்களை மேம்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, பா.ஜ., – எம்.பி., அரவிந்த் சாவந்த், அளித்த மனுவை, பகத்சிங் கோஷ்யாரி தலைமையிலான, பார்லி., கோரிக்கை ஆய்வு குழு, பரிசீலித்தது.
இதையடுத்து, இக்குழு, பார்லி.,யில் தாக்கல் செய்த அறிக்கை: பொதுத் துறையைச் சேர்ந்த, பி.எஸ்.என்.எல்., – எம்.என்.டி.எல்., நிறுவனங்கள், நிதி பிரச்னையில் சிக்கி தவிக்கின்றன. அதனால், போட்டியை சமாளிக்கும் அளவிற்கு, தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இத்தகைய சூழலில், இரு நிறுவனங்களையும் இணைப்பதன் மூலம், அவை, சந்தையில் போட்டியை எதிர்கொண்டு, வணிகத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால், இரு நிறுவனங்களின் நீண்ட கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, இணைப்பு குறித்து பரிசீலிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|