பதிவு செய்த நாள்
17 மார்2017
23:47
புதுடில்லி : ‘‘அமெரிக்காவில் தேவை அதிகரித்துள்ளதால், நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொறியியல் ஏற்றுமதி, 6,000 கோடி டாலராக உயர வாய்ப்புள்ளது,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
அவர், சென்னையில், சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சியை துவக்கி வைத்து, மேலும் பேசியதாவது: நடப்பு நிதியாண்டின், ஏப்., – ஜன., வரையிலான காலத்தில், பொறியியல் சாதனங்களின் ஏற்றுமதி, 5,087 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, 2015ல், 4,900 கோடி டாலராக குறைந்து இருந்தது. அமெரிக்காவில் பொருட்களின் பயன்பாடு அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இரும்பு போன்ற ஒருசில பொருட்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. அதனால், நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, 6,000 கோடி டாலரை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பொறியியல் சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள், மேம்பட்ட தொழில்நுட்பங்களை பின்பற்ற வேண்டும். இதற்காக, தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டத்தை உருவாக்கும் பணியில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதன் மூலம், பொறியியல் சாதன தயாரிப்பு நிறுவனங்கள், மேம்படுத்தப்பட்ட, ஏற்றுமதி சார்ந்த நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றி, ஏற்றுமதியை அதிகரிக்க முடியும். இது, நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியை உயர்த்த துணை புரியும்.இந்தியா – ரஷ்யா பரஸ்பர வர்த்தகம், 662 கோடி டாலராக உள்ளது. இதை அதிகரிக்க, இரு நாடுகளும் முயற்சி மேற்கொண்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|