பதிவு செய்த நாள்
17 மார்2017
23:49
மும்பை : ‘நாட்டில், பணத் தட்டுப்பாடு நீங்கியுள்ளதால், நிதி நிறுவனங்களின் வாகன கடன் வசூல், இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது’ என, தர நிர்ணய நிறுவனமான, ‘கிரிசில்’ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விபரம்: மத்திய அரசு, 2016 நவ., 8ல், உயர் மதிப்பு கரன்சிகள் செல்லாது என, அறிவித்தது. அத்துடன், வங்கிகள், ஏ.டி.எம்.,கள் ஆகியவற்றில் பணம் எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பணத் தட்டுப்பாடு காரணமாக, வாகனம், வீடு போன்ற வற்றுக்காக கடன் வாங்கியோர், கடன் தவணையை ரொக்கத்தில் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
எட்டப்படவில்லைஇதனால், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், குறுங்கடன் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, வாகன கடன் வாங்கியோரிடம் இருந்து வரும் மாத தவணை தொகை குறைந்தது. இதில், கிராமப்புறங்களில் அதிகளவில் விற்பனையாகும் டிராக்டர் பிரிவில் தான், பெரும் பாதிப்பு ஏற்பட்டது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையை தொடர்ந்து, வாகன கடன் வசூல், நவம்பரில், 85 சதவீதமாக குறைந்தது. இதையடுத்து, கடன் வாங்கியோரிடம், வங்கி வசதிகளின் பயன்கள் குறித்த பிரசாரங்களை, நிதி நிறுவனங்கள் மேற்கொண்டன. அத்துடன், வசூல் முறைகளிலும் மாற்றங்கள் செய்தன. அதனால், கடன் வசூல் சற்று அதிகரித்தது.
இந்நிலையில், பணத் தட்டுப்பாடு குறைய துவங்கியதால், தற்போது, வாகன கடன் வசூல், 95 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனினும், பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முந்தைய, 100 சதவீத வசூல் இன்னும் எட்டப்படவில்லை. குறுங்கடன் நிறுவனங்களின் வர்த்தகத்தில், ரொக்கப் பரிவர்த்தனை, பெரும் பங்கு வகிக்கிறது. அதனால், இத்துறை நிறுவனங்களின் கடன் வசூலில், இன்னும் பெரியளவில் முன்னேற்றம் காணப்படவில்லை.
பாதிப்புகடன் தவணையில், ரொக்க பரிவர்த்தனையின் பங்கு மிகக் குறைவாகவே உள்ளதால், பாதிப்பு எதுவுமில்லை. இப்பிரிவில், கடன் வசூல், 99 சதவீத அளவிற்கு உள்ளது. சொத்துகள் மீதான கடன் பிரிவில், சுய தொழில் முனைவோர், கடனை திரும்பச் செலுத்துவது குறைந்துள்ளது. ஒட்டுமொத்த அளவில், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், குறுங்கடன் நிறுவனங்கள் ஆகியவற்றின், கடன் தவணை வசூல், 2016 நவ., – டிச., மாதங்களில், வெகுவாக குறைந்து இருந்தது.
குறிப்பாக, உத்தர பிரதேசம், மஹாராஷ்டிராவின் சில மாவட்டங்களில், கடன் தவணையை வசூலிப்பதில், நிதி நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. இந்தாண்டு ஜனவரியில், பல்வேறு மாநிலங்களில், வங்கி சாரா நிதி நிறுவனங்களின் கடன் தவணை வசூல், 60 – 95 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. எனினும், பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன் இருந்த, 99 சதவீத கடன் தவணை வசூல் அளவு, இன்னும் எட்டப்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|