முதலீட்டாளர் மாநாட்டு ஒப்பந்தங்கள் என்ன ஆயிற்று?முதலீட்டாளர் மாநாட்டு ஒப்பந்தங்கள் என்ன ஆயிற்று? ... ரூ.10 பிளாஸ்டிக் நோட்டு : மத்திய அரசு ஒப்புதல் ரூ.10 பிளாஸ்டிக் நோட்டு : மத்திய அரசு ஒப்புதல் ...
பண தட்டுப்பாடு நீங்கியதால் வாகன கடன் வசூல் உயர்வு; ‘கிரிசில்’ நிறுவனம் ஆய்வறிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2017
23:49

மும்பை : ‘நாட்­டில், பணத் தட்­டுப்­பாடு நீங்­கி­யுள்­ள­தால், நிதி நிறு­வ­னங்­களின் வாகன கடன் வசூல், இயல்பு நிலைக்கு திரும்பி வரு­கிறது’ என, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘கிரி­சில்’ ஆய்­வ­றிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்டுள்­ளது.
அதன் விப­ரம்: மத்­திய அரசு, 2016 நவ., 8ல், உயர் மதிப்பு கரன்­சி­கள் செல்­லாது என, அறி­வித்­தது. அத்­து­டன், வங்­கி­கள், ஏ.டி.எம்.,கள் ஆகி­ய­வற்­றில் பணம் எடுக்­க­வும் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டன. பணத் தட்­டுப்­பாடு கார­ண­மாக, வாக­னம், வீடு போன்­ற ­வற்­றுக்­காக கடன் வாங்­கி­யோர், கடன் தவ­ணையை ரொக்­கத்­தில் செலுத்த முடி­யாத நிலை ஏற்­பட்­டது.
எட்டப்படவில்லைஇத­னால், வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­கள், குறுங்­க­டன் நிறு­வ­னங்­கள் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டன. குறிப்­பாக, வாகன கடன் வாங்­கி­யோ­ரி­டம் இருந்து வரும் மாத தவணை தொகை குறைந்­தது. இதில், கிரா­மப்­பு­றங்­களில் அதி­க­ள­வில் விற்­ப­னை­யா­கும் டிராக்­டர் பிரி­வில் தான், பெரும் பாதிப்பு ஏற்­பட்­டது. பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கையை தொடர்ந்து, வாகன கடன் வசூல், நவம்­ப­ரில், 85 சத­வீ­த­மாக குறைந்­தது. இதை­ய­டுத்து, கடன் வாங்­கி­யோ­ரி­டம், வங்கி வச­தி­களின் பயன்­கள் குறித்த பிர­சா­ரங்­களை, நிதி நிறு­வ­னங்­கள் மேற்­கொண்­டன. அத்­து­டன், வசூல் முறை­க­ளி­லும் மாற்­றங்­கள் செய்­தன. அத­னால், கடன் வசூல் சற்று அதி­க­ரித்­தது.
இந்­நி­லை­யில், பணத் தட்­டுப்­பாடு குறைய துவங்­கி­ய­தால், தற்­போது, வாகன கடன் வசூல், 95 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. எனி­னும், பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கைக்கு முந்­தைய, 100 சத­வீத வசூல் இன்­னும் எட்­டப்­ப­ட­வில்லை. குறுங்­க­டன் நிறு­வ­னங்­களின் வர்த்­த­கத்­தில், ரொக்­கப் பரி­வர்த்­தனை, பெரும் பங்கு வகிக்­கிறது. அத­னால், இத்­துறை நிறு­வ­னங்­களின் கடன் வசூ­லில், இன்­னும் பெரி­ய­ள­வில் முன்­னேற்­றம் காணப்­ப­ட­வில்லை.
பாதிப்புகடன் தவ­ணை­யில், ரொக்க பரி­வர்த்­த­னை­யின் பங்கு மிகக் குறை­வா­கவே உள்­ள­தால், பாதிப்பு எது­வு­மில்லை. இப்­பி­ரி­வில், கடன் வசூல், 99 சத­வீத அள­விற்கு உள்­ளது. சொத்­து­கள் மீதான கடன் பிரி­வில், சுய தொழில் முனை­வோர், கடனை திரும்­பச் செலுத்­து­வது குறைந்­துள்­ளது. ஒட்­டு­மொத்த அள­வில், வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­கள், குறுங்­க­டன் நிறு­வ­னங்­கள் ஆகி­ய­வற்­றின், கடன் தவணை வசூல், 2016 நவ., – டிச., மாதங்­களில், வெகு­வாக குறைந்து இருந்­தது.
குறிப்­பாக, உத்­தர பிர­தே­சம், மஹா­ராஷ்­டி­ரா­வின் சில மாவட்­டங்­களில், கடன் தவ­ணையை வசூ­லிப்­ப­தில், நிதி நிறு­வ­னங்­கள் பெரும் பாதிப்பை சந்­தித்­தன. இந்­தாண்டு ஜன­வ­ரி­யில், பல்­வேறு மாநி­லங்­களில், வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­களின் கடன் தவணை வசூல், 60 – 95 சத­வீ­தம் வரை உயர்ந்­துள்­ளது. எனி­னும், பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கைக்கு முன் இருந்த, 99 சத­வீத கடன் தவணை வசூல் அளவு, இன்­னும் எட்­டப்­ப­ட­வில்லை. இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)