பதிவு செய்த நாள்
18 மார்2017
14:16
புதுடில்லி : அடுத்த 5 முதல் 6 மாதங்களில் இந்தியாவில் 50 முதல் 60 லட்சம் மொபைல் போன்களை விற்பனை செய்ய மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் விரைவில் பாரத் 1 4ஜி வாலட் பீச்சர் போன் மற்றும் பாரத் 2 வாலட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய மாடல்கள் மூலம் இந்தியாவில் 50 முதல் 60 லட்சம் போன்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்தள்ளது. இதன் மூலம் சீன மட்டுமின்றி இந்திய சந்தைகளில் வலுவான இடத்தை பிடிக்க முடியும் என மைக்ரோமேக்ஸ் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி சுபஜித் சென் தெரிவித்துள்ளார்.
இந்திய சந்தைகளில் வலுவான நிலையை அடைவதற்காக மிக் குறைந்த விலையில் 4ஜி வாலட் ஸ்மார்ட்போன்களை வழங்க மைக்ரோமேக்ஸ் முடிவு செய்துள்ளது. இதனால் கூகுள் நிறுவனத்தின் அங்கீகாரத்தை பெற்ற பாரத் 2 போனின் விலையை ரூ.3000 க்கு கீழ் நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது. இந்தியாவிலேயே உற்பத்தியை துவக்கவும் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|