60 லட்சம் மொபைல் போன்கள் விற்பனை : மைக்ரோமேக்ஸ் இலக்கு60 லட்சம் மொபைல் போன்கள் விற்பனை : மைக்ரோமேக்ஸ் இலக்கு ... உருக்கு ஏற்றுமதி 78 சதவீதம் உயர்வு உருக்கு ஏற்றுமதி 78 சதவீதம் உயர்வு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தைகளில் ஏற்றம் தொடரும் : நிபுணர்கள் கருத்து
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2017
15:35

2015 ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு, நேற்று முன்தினம் (மார்ச் 16) சென்செக்ஸ் மீண்டும் 29,000 புள்ளிகளை கடந்தது. நிப்டியும் முதல் முறையாக 9100 புள்ளிகளை கடந்தது. வரலாற்றில் முதல் முறையாக இந்திய பங்குச்சந்தைகளில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம், இந்த ஆண்டு இறுதி வரையில் தொடரும் என சந்தை ஆய்வாளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துகணிப்பில் தெரிய வந்துள்ளது.
பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள அதிரடி உயர்வு குறித்து சந்தை நிபுணர்கள் மற்றும் நிதி நிர்வாகிகளிடம் கருத்துகணிப்பு நடத்தப்பட்டது. இதில் பலரும், சென்செக்ஸ் இனி வரும் காலங்களில் 30,000 முதல் 35,000 புள்ளிகள் வரை உயரும் என தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் 40,000 புள்ளிகள் வரை உயரும் என தெரிவித்துள்ளனர். 2017 ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்செக்ஸ் 35,000 புள்ளிகளுக்கு மேலும், நிப்டி 9000 முதல் 9500 புள்ளிகள் வரையிலும் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 60 சதவீதம் சந்தை நிபுணர்கள், நிப்டி 9500 புள்ளிகள் வரை உயரும் என கருத்து தெரிவித்துள்ளனர். தற்போது உலகின் பெரிய முதலீட்டு சந்தையாக விளங்கும் நிப்டி இந்த ஆண்டு இறுதிக்குள் மிகப் பெரிய உயரத்தை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 மாநில சட்டசபை தேர்தல்களில் மத்தியில் ஆளும் பா.ஜ., பெற்ற வெற்றி, மத்திய அரசு மேற்கொண்ட வரும் சீர்திருத்த நடவடிக்கைகள், மார்ச் மாதத்தில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள முதலீட்டு கொள்கைகள் உள்ளிட்டவைகள் இந்திய பங்குச்சந்தைகளின் உயர்விற்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளதாக சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)