பதிவு செய்த நாள்
18 மார்2017
15:35
2015 ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு, நேற்று முன்தினம் (மார்ச் 16) சென்செக்ஸ் மீண்டும் 29,000 புள்ளிகளை கடந்தது. நிப்டியும் முதல் முறையாக 9100 புள்ளிகளை கடந்தது. வரலாற்றில் முதல் முறையாக இந்திய பங்குச்சந்தைகளில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம், இந்த ஆண்டு இறுதி வரையில் தொடரும் என சந்தை ஆய்வாளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துகணிப்பில் தெரிய வந்துள்ளது.
பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள அதிரடி உயர்வு குறித்து சந்தை நிபுணர்கள் மற்றும் நிதி நிர்வாகிகளிடம் கருத்துகணிப்பு நடத்தப்பட்டது. இதில் பலரும், சென்செக்ஸ் இனி வரும் காலங்களில் 30,000 முதல் 35,000 புள்ளிகள் வரை உயரும் என தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் 40,000 புள்ளிகள் வரை உயரும் என தெரிவித்துள்ளனர். 2017 ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்செக்ஸ் 35,000 புள்ளிகளுக்கு மேலும், நிப்டி 9000 முதல் 9500 புள்ளிகள் வரையிலும் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 60 சதவீதம் சந்தை நிபுணர்கள், நிப்டி 9500 புள்ளிகள் வரை உயரும் என கருத்து தெரிவித்துள்ளனர். தற்போது உலகின் பெரிய முதலீட்டு சந்தையாக விளங்கும் நிப்டி இந்த ஆண்டு இறுதிக்குள் மிகப் பெரிய உயரத்தை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 மாநில சட்டசபை தேர்தல்களில் மத்தியில் ஆளும் பா.ஜ., பெற்ற வெற்றி, மத்திய அரசு மேற்கொண்ட வரும் சீர்திருத்த நடவடிக்கைகள், மார்ச் மாதத்தில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள முதலீட்டு கொள்கைகள் உள்ளிட்டவைகள் இந்திய பங்குச்சந்தைகளின் உயர்விற்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளதாக சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|