பதிவு செய்த நாள்
19 மார்2017
03:47
புதுடில்லி : ‘‘நடப்பு நிதியாண்டின், ஏப்., – பிப்., வரையிலான, 11 மாதங்களில், நாட்டின் உருக்கு ஏற்றுமதி, 78 சதவீதம்உயர்ந்துள்ளது,’’ என,மத்திய உருக்கு துறை அமைச்சர் சவுத்ரி பிரேந்தர் சிங் தெரிவித்து உள்ளார்.அவர், மேலும் கூறியதாவது:இந்திய உருக்கு துறைக்கு கடுமையான சவால் விடுக்கக் கூடிய வகையில், கடந்த மூன்று ஆண்டுகள் இருந்தன. இதையடுத்து, மத்திய அரசு, உருக்கு துறையை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.குறிப்பாக, மலிவு விலை உருக்கு பொருட்களின் இறக்குமதியை குறைக்க, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஒருசில உருக்கு பொருட்களுக்கு, பொருள் குவிப்பு தடை வரி விதிக்கப்பட்டது.இது போன்ற நடவடிக்கைகளால், உருக்கு துறை எழுச்சி கண்டு வருகிறது.கடந்த, 11 மாதங்களில், உருக்கு நிறுவனங்கள், 78 சதவீதத்திற்கும் அதிகமான உற்பத்தித் திறனில் செயல்பட்டு வருகின்றன. உருக்கு பொருட்களின் இறக்குமதி, 39 சதவீதம் குறைந்துள்ளது. அதே சமயம், உருக்கு ஏற்றுமதி, 78 சதவீதம் அதிகரித்துள்ளது.இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உருக்கு பொருட்களை, முக்கிய திட்டங்களில் அதிக அளவிற்கு பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இது தொடர்பாக, அனைத்து துறை அமைச்சகங்களுடன், ஆலோசனை நடைபெற்று வருகிறது. உருக்கு நிறுவனங்களின் கடன்களை சீரமைப்பது குறித்து, ரிசர்வ் வங்கியிடம், ஏற்கனவே பேச்சு நடத்தப்பட்டுள்ளது. ஏராளமான கடன்கள் மறுசீரமைக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|