பதிவு செய்த நாள்
20 மார்2017
00:53
முதலீட்டாளர்கள் மத்தியில், மியூச்சுவல் பண்ட் முதலீடு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இத்துறை நிறுவனங்களுக்கான அமைப்பான, இந்திய மியூச்சுவல் பண்ட்கள் சங்கம் (ஏ.எம்.எப்.ஐ.,) விளம்பர பிரசாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
மியூச்சுவல் பண்ட்களை, முதலீட்டிற்கு ஏற்ற சாதனங்கள் என்பதை, இந்த பிரசாரம் முன்னிறுத்தும். பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி, மியூச்சுவல் பண்ட் நிறுவங்கள், 2 அடிப்படை சதவீத தொகையை முதலீட்டாளர் கல்விக்காக ஒதுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. இதில் பாதி தொகை, ஏ.எம்.எப்.ஐ., அமைப்புடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இந்த தொகையை கொண்டு, தற்போது விழிப்புணர்வு பிரசாரத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
‘டிவி,’ டிஜிட்டல் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் வாயிலாக இந்த விழிப்புணர்வு திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. சாமானிய மக்கள் மியூச்சுவல் பண்ட்கள் பற்றி எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், அவை தொடர்பான தவறான கருத்துக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் இது அமைந்திருக்கும்.
பொது மக்களுக்கு சிந்தனையை துாண்டும் வகையில் மியூச்சுவல் பண்ட் முதலீடு தகவல்களை புரிய வைப்போம் என, ஏ.எம்.எப்.ஐ., தலைவர் பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|