பதிவு செய்த நாள்
20 மார்2017
00:53
கடைசி நேர அவசரத்தில், வரிச்சலுகை பெறுவதற்காக முதலீடு செய்ய நேர்ந்தாலும், முதலீடு தொடர்பான முடிவு சரியானதாகவும், புத்திசாலித்தனமானதாகவும் அமைய வேண்டும்.
வரிச்சலுகையை மட்டும் மனதில் கொள்ளாமல் முதலீடு தரக்கூடிய பலன்களை பரிசீலித்து செயல்பட வேண்டும். 2016 – 17ம் நிதியாண்டை பொறுத்தவரை வருமான வரிச்சலுகை பெறுவதற்கான முதலீடுகளை மேற்கொள்வதற்கான காலம், இம்மாத இறுதியுடன் முடிவடைகிறது. பொதுவாக வரிச்சலுகைக்கான முதலீட்டை முன்கூட்டியே திட்டமிடுவது தான் சிறந்தது என்றாலும், பல்வேறு காரணங்களில், பலரும் மார்ச் மாத வாக்கில் முதலீடு செய்வதுண்டு.
கடைசி நேரத்தில் முதலீடு செய்ய நேர்ந்தாலும், வரிச்சலுகையை மட்டும் மனதில் கொண்டு முடிவெடுக்காமல், சரியான முதலீட்டு வாய்ப்புகளை தேர்வு செய்ய வேண்டும் என, நிதி ஆலோசகர்கள் வலியுறுத்துகின்றனர்.
முதலீடு பட்டியல்!வரிச்சலுக்கைகாக மட்டும் தேவையில்லாமல் அதிக அளவில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். இதற்காக முதலில் வருமான வரிச்சட்டம் 80 சி பிரிவின் கீழ், வரிச்சலுகை பெறுவதற்காக உள்ள முதலீட்டு பட்டியலில் ஏற்கனவே செய்யப்பட்டுள்ள முதலீடுகளை கவனத்தில் கொள்ள வேண்டும். வரிச்சலுகை பெற பல திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்றாலும், நீங்கள் தேர்வு செய்யும் திட்டங்கள், வரிச்சலுகை இல்லாத நிலையிலும், பலன் தரக்கூடியதாகவும், உங்கள் நிதி இலக்கிற்கு ஏற்றதாகவும் இருப்பது அவசியம். இதை அடிப்படை அம்சமாக கொண்டு, முதலீடுகளை தேர்வு செய்தால், அவை உங்கள் நிதி இலக்கிற்கும் ஏற்றதாக அமையும்.
பாதுகாப்பு முக்கியம்!முதலீடு தரக்கூடிய பலன் போலவே, அதன் பாதுகாப்பும் மிகவும் முக்கியம். பி.பி.எப்., எனப்படும் பொது சேமநல நிதி முதலீடு பாதுகாப்பானது. மேலும், ஓய்வு காலத்திற்கான நீண்ட கால முதலீட்டிற்கும் இது உதவுகிறது. வரிச்சலுகைக்காக ஆயுள் காப்பீடு பெறும் போது, டெர்ம் திட்டங்களே ஏற்றது என கருதப்படுகிறது. தேசிய பென்ஷன் திட்டமான, என்.பி.எஸ்., திட்டத்தை பொறுத்தவரை வழக்கமான வரம்பை விட, கூடுதலாக 50 ஆயிரம் ரூபாய் சலுகையும் இருக்கிறது. ஓய்வூதிய முதலீடு நோக்கில் இந்த வாய்ப்பை பரிசீலிக்கலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|