பதிவு செய்த நாள்
23 மார்2017
06:29
புதுடில்லி: சீனாவைச் சேர்ந்த ஜியோமி, இந்தியாவில், மொபைல் போன்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இந்நிறுவனம், இந்தியாவில், இரண்டாவது தொழிற்சாலை அமைக்க முடிவு செய்து உள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாட்டில், போன்களின் சந்தையில், ஸ்மார்ட் போன்களின் எண்ணிக்கை, 11 கோடியாக உள்ளது. இது, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 20 கோடியாக அதிகரிக்கும்.நிறுவனத்தின் மொபைல் போன்களுக்கு, வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. அதனால், ஆந்திர மாநிலம், ஸ்ரீ சிட்டியில், பாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து, இரண்டாவது தொழிற்சாலை அமைக்கப்பட இருக்கிறது. இந்த ஆலை செயல்பாட்டுக்கு வந்த பின், உற்பத்தி ஒரு வினாடிக்கு, ஒரு போன் என இருக்கும். மேலும் இந்த இரண்டாவது தொழிற்சாலையில் ஜியோமி போன்கள் மட்டுமே தயாரிக்கப்படும். நிறுவனத்தின் இரு ஆலைகளும், 5,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கக்கூடியதாக இருக்கிறது. அதில், பெண்களின் பங்கு, 90 சதவீதமாக இருக்கும். இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில், ஜியோமியின் பங்கு, 10.7 சதவீதமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|