பதிவு செய்த நாள்
25 மார்2017
01:53
சென்னை:இந்தியாவில் உள்ள, ஜப்பான் நிறுவனங்களில், 50 சதவீதம், தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஜப்பான் நிறுவனங்களுடன், தமிழக நிறுவனங்கள் மேலும் அதிகளவில் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, சென்னையில் உள்ள, ஜப்பான் துணை துாதரகம் ஆய்வு மேற்கொண்டது.
அதில், ஜப்பான் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும், தமிழகத்தைச் சேர்ந்த, 122 நிறுவனங்கள் பங்கேற்றன. அவற்றில், 39 சதவீத நிறுவனங்கள், தொழில்நுட்பத்திற்காகவும், தொழிலை அறிந்து கொள்ளவும், ஜப்பான் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக தெரிவித்துள்ளன.
புதிய பொருட்களை தயாரிக்கவும், சர்வதேச சந்தையில் சுலபமாக நுழையவும், ஜப்பான் நிறுவனங்கள் துணை புரியும் என, முறையே, 25 மற்றும் 17 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதே சமயம், ஜப்பானில் முதலீடு செய்வது லாபகரமானதல்ல என்பதால், அதை விரும்பவில்லை என, ஆய்வில் பங்கேற்ற, 68 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|