பதிவு செய்த நாள்
25 மார்2017
01:55
புதுடில்லி:மத்திய அரசு, கடந்த ஆண்டு, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உணவு பொருட்களை விற்பனை செய்யும் துறையில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கியது. இது வலைதளம் மூலமாக வர்த்தகத்தில் ஈடுபடும், ‘இ – காமர்ஸ்’ நிறுவனங்களுக்கும் பொருந்தும்.இந்நிலையில் மூன்று பெரிய நிறுவனங்களான, அமேசான், குரோபெர்ஸ், பிக்பாஸ்கெட் ஆகிய நிறுவனங்கள், இத்துறையில், 69.5 கோடி டாலர் முதலீடு செய்வதற்கு அனுமதி கோரியுள்ளன.
இது குறித்து, மத்திய அரசின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த, 2010 – 11 முதல், 15 – 16 வரை, உணவு பதப்படுத்துதல் துறை ஈட்டிய அன்னிய நேரடி முதலீடு, 576 கோடி டாலர் என்றளவில் உள்ளது. நடப்பு நிதியாண்டில், டிச., வரையிலான காலத்தில், அந்த துறை, 66.32 கோடி டாலர் அன்னிய முதலீட்டை ஈர்த்துள்ளது.
மத்திய அரசு, உணவு துறையில், 100 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்துள்ளதால், அமேசான், குரோபெர்ஸ், பிக் பாஸ்கெட் ஆகியவை, 69.50 கோடி டாலர் முதலீடு செய்ய, வரைவு அறிக்கை வழங்கியுள்ளன. அவற்றை பரிசீலித்த பின், விரைவில் அனுமதி வழங்கப்படும். அமேசான் மட்டும், 50 கோடி டாலர் முதலீடு செய்ய உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|