பதிவு செய்த நாள்
25 மார்2017
01:58
புதுடில்லி;கடந்த பிப்ரவரியில், பார்தி ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட ஆறு நிறுவனங்கள், 22.7 லட்சம் மொபைல் போன் சந்தாதாரர்களை சேர்த்துள்ளன.
இது குறித்து, இந்திய செல்லுலார் ஆப்பரேட்டர்கள் சங்கம் வெளியிட்டு உள்ள அறிக்கை:கடந்த பிப்ரவரியில், பார்தி ஏர்டெல், ஐடியா செல்லுலார், வோடபோன் உள்ளிட்ட ஆறு நிறுவனங்களின் மொபைல் போன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை, 22.7 லட்சம் அதிகரித்து, 81.74 கோடியாக உயர்ந்துள்ளது.
பார்தி ஏர்டெல், 12.5 லட்சம்; ஐடியா செல்லுலார், 12.1 லட்சம்; வோடபோன், 79 ஆயிரம்; ஏர்செல், 10 ஆயிரம் என்ற அளவில், சந்தாதாரர்களை இணைத்துள்ளன.ஏர்டெல், டெலினார் நிறுவனத்தை கையகப்படுத்தியதை அடுத்து, அதன், 9.9௦ லட்சம் சந்தாதாரர்களை, தன்னுடன் இணைத்துக் கொண்டது.சந்தாதாரர்களை சேர்த்ததில், உ.பி., கிழக்கு, 7.46 கோடி உடன் முதலிடத்திலும்; மஹாராஷ்டிரா, பீஹார் மாநிலங்கள், அடுத்த இடங்களிலும் உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|