பதிவு செய்த நாள்
26 மார்2017
02:01
புதுடில்லி : முகேஷ் அம்பானி தலைமையிலான, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதன், 12 துணை நிறுவனங்கள், முன்பேர வர்த்தகத்தில் ஈடுபட, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ ஓராண்டுக்கு தடை விதித்துள்ளது.அத்துடன், 440 கோடி ரூபாய் மற்றும் 2007 நவ., முதல், தற்போது வரை, அத்தொகைக்கான, 12 சதவீத ஆண்டு வட்டியை கணக்கிட்டு வழங்குமாறும் உத்தரவிட்டு உள்ளது. வட்டி தொகையே, 500 கோடி ரூபாய்க்கும் மேலாக இருக்கும் என்பதால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், 1,000 கோடி ரூபாய் அளவிற்கு, ‘செபி’க்கு வழங்க வேண்டியிருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.ரிலையன்ஸ் குழுமத்தின் ஓர் அங்கமாக, ரிலையன்ஸ் பெட்ரோலியம் இருந்த போது, அதன் பங்குகள் மீது, முன்பேர சந்தையில், முறைகேடாக பரிவர்த்தனை நடந்துள்ளதாக கூறி, இத்தகைய நடவடிக்கையை, ‘செபி’ எடுத்துள்ளது. இதனிடையே, ‘செபி’யின் உத்தரவை எதிர்த்து, மேல்முறையீடு செய்ய உள்ளதாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|