பதிவு செய்த நாள்
27 மார்2017
03:05
அண்மை காலங்களில் வெளியான பங்கு வெளியீடுகளில், 30 மடங்கிற்கு மேல் விண்ணப்பங்களை பெற்ற நிறுவனங்களில் பலவற்றின் பங்குகள் பட்டியலிடப்பட்ட பிறகு ஏற்றம் கண்டுள்ளன.
வர்த்தக நிறுவனம் பொதுமக்களுக்காக பங்குகளை வெளியிடுவது ஐ.பி.ஒ., என குறிப்பிடப்படுகிறது. கடந்த ஓராண்டில் பல புதிய நிறுவனங்கள் பங்குகளை வெளியிட்டு பங்குச்சந்தையில் நுழைந்துள்ளன. அண்மையில், சில்லரை வர்த்தக மையங்களான டிமார்ட்டை நடத்தும் அவென்யூ சூப்பர் மார்க்கெட்ஸ் பங்குகளை வெளியிட்டது.இந்நிறுவன பங்குகள், 104 மடங்கு விண்ணப்பங்களை பெற்றன. கடந்த வாரம் இதன் பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பின் ஏற்றம் கண்டன. அறிமுக விலையான, 299 ரூபாயில் இருந்து 641 ரூபாயாக இது உயர்ந்தது.
கடந்த ஓராண்டுகளில், இதே போல, 30 மடங்கு விண்ணப்பங்களுக்கு மேல் பெற்ற 10 நிறுவனங்களில் ஐந்து நிறுவனங்களின் பங்குகள் பட்டியலிடப்பட்ட பிறகு, 100 சதவீதத்திற்கு மேல் உயர்ந்து உள்ளதாக தெரிய வந்துள்ளது. அட்வான்ஸ்ட் என்சைம் டெக்னாலஜிஸ், ஆர்.பி.எல்., பாங்க், குவெஸ் கார்ப் மற்றும் மஹாநகர் கேஸ் ஆகியவை உயர்வை சந்தித்துள்ளன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|