பதிவு செய்த நாள்
27 மார்2017
03:08

இளம் வயதிலேயே சேமிக்கத் துவங்குங்கள் என்பது தான், தனிநபர் நிதியில் அடிப்படை விதியாக சொல்லப்படுகிறது. கூட்டு வட்டியின் பலனை முழுமையாக பெற முடியும் என்பதே, இதற்கான காரணம். சேமிப்பு என்பது, உங்களுக்கு நீங்களே ஊதியம் அளிப்பது எனவும் குறிப்பிடப்படுகிறது. நமக்காக சம்பாதிக்கும் போது, அதன் முதல் செலவு, நமக்காக அமைவது தானே சரியாக இருக்கும். எனவே தான், ஊதியத்தில் ஒரு பகுதியை, முதலில் சேமிப்பாக, உங்களுக்காக எடுத்து வையுங்கள் என்கின்றனர்.
சேமிப்பின் பயன்சேமிப்பதன் அடுத்த கட்டம், அதை கொண்டு என்ன செய்கிறோம் என்பது. சேமிப்பதற்கு இரண்டு முக்கிய நோக்கம் இருப்பதாக சொல்கிறார், ‘ஆட்டமேட்டிக் மில்லினர்’ எனும் புகழ்பெற்ற புத்தகத்தை எழுதிய தனிநபர் நிதி எழுத்தாளரான டேவிட் பாஷ். சேமிக்கப்படும் தொகையில், ஓய்வூதிய நிதி மற்றும் அவசர கால நிதிக்கான தொகை கட்டாயம் ஒதுக்கப்பட வேண்டும் என்கிறார். ஓய்வூதிய நிதி, பணி வாழ்க்கைக்கு பின் கைகொடுப்பது. அவசர கால நிதி, எதிர்பாராத நெருக்கடிகளை சமாளிக்க உதவும்.
சேமிப்பின் அளவு?சேமிக்க வேண்டும் என்பது சரி தான். ஆனால், எவ்வளவு தொகை சேமிப்பது சரியாக இருக்கும்? இந்த கேள்விக்கான பதில் ஒருவரின் வாழ்வியல் மற்றும் நிதி இலக்குகளுக்கு ஏற்ப மாறக்கூடியது என்றாலும், பொதுவாக எல்லாரும் பின்பற்றக்கூடிய ஒரு வரையறை இருக்கவே செய்கிறது. வயதிற்கேற்ப இந்த தொகை அமைய வேண்டும் என்கிறார் டேவிட் பாஷ். இதை எளிதாக ஒரு பட்டியல் மூலம் விளக்குகிறார். 20 வயது துவங்கி ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் சம்பளத்தில் சேமிக்க வேண்டிய அளவை அவர் முன்வைத்துள்ளார்.
ஒவ்வொரு பருவத்திலும் சேமிக்க வேண்டிய தொகை
ஓய்வு கால நிதிக்கான தொகை20கள் – மொத்த வருமானத்தில் 10 சதவீதம்30கள் – மொத்த வருமானத்தில் 12.5 சதவீதம்40கள் – மொத்த வருமானத்தில் 15 சதவீதம்50கள் – மொத்த வருமானத்தில் 20 சதவீதம்60கள் – இப்படி சேமித்து வந்திருந்தால் இந்த வயதிற்கு பின், சுதந்திரமாக அதன் பலனை அனுபவிக்கலாம்.
அவசரகால நிதிக்கான தொகை20கள் – குறைந்தது 3 மாத அடிப்படை செலவுக்கான தொகை30கள் – 3 முதல் 6 மாத கால செலவுக்கான தொகை40கள் – 6 முதல் 12 மாத கால செலவுக்கான தொகை50கள் – 12 முதல் 24 மாத கால செலவுக்கான தொகை60கள் – 3 முதல் 5 ஆண்டு கால செலவுக்கான தொகை
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|