‘டிஜிட்டல்’ தொழில்நுட்பத்தை பின்பற்றினால்... நிறுவனங்களின் வருவாய் 27 சதவீதம் உயரும்‘டிஜிட்டல்’ தொழில்நுட்பத்தை பின்பற்றினால்... நிறுவனங்களின் வருவாய் 27 ... ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.65.13 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.65.13 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வீட்­டுக்­கடன் தவ­ணையை குறைக்க என்ன வழி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மார்
2017
03:09

பழைய வட்டி விகித முறையில், வீட்­டுக்­கடன் பெற்­ற­வர்கள், எம்.சி.எல்.ஆர்., அடிப்­ப­டை­யி­லான வட்டி விகித முறைக்கு மாறு­வதை, பரி­சீ­லிக்­கலாம் என, வல்­லு­னர்கள் பரிந்­து­ரைக்­கின்­றனர்.
புதி­தாக வீட்­டுக்­கடன் பெற விரும்­பு­கி­ற­வர்­களும், ஏற்­க­னவே வீட்­டுக்­கடன் பெற்­ற­வர்­களும், எப்­போ­துமே வட்டி விகிதம் மீது ஒரு கண் வைத்­தி­ருக்க வேண்டும். ஏனெனில், வட்டி விகித போக்கு கட­னுக்­கான வட்டி விகி­தத்தை தீர்­மா­னிப்­ப­தோடு, மாதத்­த­வணை தொகை­யையும் தீர்­மா­னிக்கும். தற்­போ­தைய நிலையில் வீட்டுக் கட­னுக்­கான வட்டி விகிதம் குறை­வாக உள்­ளது. கடந்த சில மாதங்­க­ளுக்கு முன், முன்­னணி வங்­கிகள் வீட்டுக் கட­னுக்­கான வட்டி விகி­தத்தை குறைத்­தன. ஆனால், குறைந்த வட்டி விகித சூழலில் பலனை புதி­தாக கடன் பெறு­ப­வர்­களே அனு­ப­விக்கும் நிலை உள்­ளது.
எம்.சி.எல்.ஆர்., முறைஒரு சில வங்­கிகள் புதிய வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு குறைந்த வட்டி விகி­தத்தில் கடன் அளிக்­கின்­றன. பழைய வாடிக்­கை­யா­ளர்­களை பொறுத்­த­வரை அதிக வட்டி விகி­தமே தொடர்­கி­றது.பொது­வா­கவே வீட்டுக் கட­னுக்­கான வட்டி விகிதம் வங்­கி­க­ளுக்கு இடையே மாறக்­கூ­டி­யது தான். ஆனால், ஒரே வங்­கியில் கடன் பெற்­ற­வர்கள் இடையே கூட மாறு­பட்ட வட்­டி­ வி­கிதம் வசூ­லிக்­கப்­ப­டு­கி­றது. வாகனக் கடன், தனி­ந­பர்­க­ளுக்கும் இது பொருந்தும். ஏற்­க­னவே கடன் பெற்­ற­வர்­க­ளுக்கும், புதி­தாக கடன் பெறு­ப­வர்­க­ளுக்கும் மாறு­பட்ட வட்டி விகிதம் பின்­பற்­றப்­ப­டு­வதே இதற்கு காரணம்.
கடன் வழங்­கு­வ­தற்­கான வட்டி விகி­தத்தை வங்­கிகள் எம்.சி.எல்.ஆர்., எனப்­படும், ‘மார்­ஜினல் காஸ்ட் பேஸ்டு லெண்டிங் ரேட்’ அடிப்­ப­டையில் வழங்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி வலி­யு­றுத்­தி­யுள்­ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த முறையை வங்­கிகள் பின்­பற்றி வரு­கின்­றன. வங்­கி­க­ளுக்­கான குறு­கிய கால கடன் விகி­த­மான, ‘ரெப்போ ரேட்’ குறைக்­கப்­படும் போது, அதன் பலன் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­வதை உறுதி செய்யும் வகையில், எம்.சி.எல்.ஆர்., முறை கொண்டு வரப்­பட்­டது. அதற்கு முன், ‘பேஸ் ரேட்’ அடிப்­ப­டை­யி­லான முறை பின்­பற்­றப்­பட்­டது. அதற்கு முன், ‘பிரைம் லெண்டிங் ரேட்’ முறை பின்­பற்­றப்­பட்­டது.
வங்­கிகள் வட்­டி­ வி­கிதம் உயரும் போது, மாறும் வட்டி விகித கட­னுக்­கான வட்டி விகி­தத்­தையும் உடனே உயர்த்தி விடு­கின்­றன என்­றாலும், அதே வேகத்தில் வட்டி குறைப்பின் பலனை வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு அளிப்­ப­தில்லை எனும் கருத்து நில­வி­யது. இதை சீராக்கும் வகை­யி­லேயே ரெப்போ விகித மாற்­றத்­திற்கு ஏற்ப வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு பலன் அளிக்க வழி செய்யும், எம்.சி.எல்.ஆர்., முறை அமல் செய்­யப்­பட்­டுள்­ளது.
மாறும் வசதிபுதி­தாக கடன் பெறும் வாடிக்­கை­யா­ளர்கள் அனை­வரும் எம்.சி.எல்.ஆர்., முறையில் தான், கடன் பெறு­கின்­றனர். எனவே, தற்­போ­தைய சூழ­லுக்கு ஏற்ப வட்டி விகிதம் குறை­வாக உள்­ளது. ஏற்­க­னவே கடன் பெற்ற வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு பழைய பேஸ் ரேட் முறை­யி­லான வட்டி விகி­தமே தொடர்­கி­றது. எனினும், பழைய வாடிக்­கை­யா­ளர்கள் விரும்­பினால் புதிய முறைக்கு மாறிக்­கொள்ளும் வசதி அளிக்­கப்­பட்­டுள்­ளது. அதிக வட்டி விகி­தத்தில் தொடர்­வ­தாக உணர்­ப­வர்கள், புதிய முறைக்கு மாறு­வதன் மூலம், வட்டி விகி­தத்தை குறைத்­துக் ­கொள்ள வாய்ப்­பி­ருக்­கி­றது. இதன் மூலம் கட­னுக்­கான மாதத்­த­வ­ணையும் குறையும் வாய்ப்­புள்­ளது.
உதா­ர­ணத்­திற்கு, 15 ஆண்டு கால அளவில், 50 லட்சம் கடன் நிலு­வைத்­தொகை உள்ள ஒருவர், மாற்­றத்தின் மூலம், ஒரு சத­வீதம் வட்டி குறைக்­கப்­பட்டால் கூட, மாதத் தவ­ணையில், 2,950 ரூபாய் அள­வுக்கு குறைய வாய்ப்­புள்­ளது. ஆனால், இந்த மாற்­றத்­திற்கு கட்­டணம் உண்டு என்­பதை மனதில் கொள்ள வேண்டும்.
குறைக்கும் வசதிஏற்­க­னவே கடன் பெற்­ற­வர்கள் அதிக வட்டி விகிதம் கொண்­டி­ருப்­ப­தாக உணர்ந்தால், தற்­போ­துள்ள முறைக்கு மாறு­வது பற்றி பரி­சீ­லிக்­கலாம் என, வல்­லு­னர்கள் கரு­து­கின்­றனர். ரிசர்வ் வங்கி அண்மை மாதங்­களில் ரெப்போ விகி­தத்தில் மாற்றம் செய்­ய­வில்லை. எனினும், தற்­போ­தைய சூழலில் இருந்து வட்டி விகிதம் உட­ன­டி­யாக உயர வாய்ப்­பில்லை என, வல்­லு­னர்கள் கரு­து­கின்­றனர். ஓராண்டு காலத்தில் குறையும் வாய்ப்­பி­ருப்­பதா­கவும் கரு­தப்­ப­டு­கி­றது. எனவே, மாற்­றத்தை பரி­சீ­லிக்க இது ஏற்ற நேர­மாகும். ஆனால், வட்டி விகிதம் உயரும் நிலை ஏற்­பட்டால் புதிய முறையில் கட­னுக்­கான வட்டி விகி­தமும் உயரும்.
வட்டி விகி­தத்தை மாற்ற விரும்­பு­கி­ற­வர்கள், நிலு­வையில் உள்ள கடன் தொகை, வட்டி விகிதம், மாற்­றத்தால் கிடைக்க கூடிய பலன் ஆகி­ய­வற்றை கணக்­கிட்டு, ஏற்­க­னவே உள்ள சூழ­லோடு ஒப்­பிட்டு முடிவு எடுக்க வேண்டும். மாற்­றத்­திற்­கான, ‘ரிசெட்’ கட்­டணம் உண்டு என்­பதால் அதையும் கணக்கில் எடுத்­துக்­கொள்ள வேண்டும். எனினும், இதை குறைக்க அல்­லது தள்­ளு­படி செய்­யவும் வங்­கி­க­ளிடம் வலி­யு­றுத்தும் வாய்ப்­புள்­ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)