பதிவு செய்த நாள்
28 மார்2017
02:15
மும்பை : எஸ்.பி.ஐ., லைப், காப்பீட்டு வணிகத்தில், பக்ரைன் நாட்டில் கால் பதிக்க முடிவு செய்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பிரான்ஸ் நாட்டில் நிதி சேவையில் ஈடுபட்டு வரும், பி.என்.பி., பரிபாஸ் கர்டிப் ஆகியவற்றின் கூட்டு நிறுவனம், எஸ்.பி.ஐ., லைப். இந்நிறுவனம், ஆயுள் காப்பீட்டு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. உள்நாட்டு ஆயுள் காப்பீட்டு துறை சந்தையில், எஸ்.பி.ஐ., லைப்பின் பங்கு, 22 சதவீதம் என்றளவில் உள்ளது. இந்நிலையில், இந்நிறுவனம், பக்ரைன் நாட்டில், காப்பீட்டு வணிகத்தில் ஈடுபட உள்ளது.
இதுகுறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அர்ஜித் பாது கூறியதாவது:நிறுவனம், விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக, பக்ரைன் நாட்டில், காப்பீட்டு வணிகத்தில் களமிறங்க உள்ளது. இதற்காக ஏற்கனவே, காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையத்திடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. தற்போது, அங்கு கிளை துவக்க, அந்நாட்டின் மத்திய வங்கியின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். விரைவில், அங்கு காப்பீட்டு வணிகத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது, இந்தியாவைச் சேர்ந்த, பொதுத் துறை நிறுவனமான எல்.ஐ.சி., மட்டும் தான், பக்ரைன், துபாய், கத்தார், குவைத், ஓமன் ஆகிய நாடுகளில், காப்பீட்டு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|