பதிவு செய்த நாள்
30 மார்2017
16:01
புதுடில்லி : ஏப்ரல் 1 ம் தேதி முதல் பிஎஸ் 3 மாடல் வாகனங்களை விற்பனை செய்ய தடை விதிப்பதாக சுப்ரீம் கோர்ட் நேற்று அறிவித்தது. இதனையடுத்து இருப்பு வைத்திருக்கம் பிஎஸ் 3 மாடல் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்ய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
பிஎஸ் 3 மாடல் வாகன விற்பனைக்கான கெடு முடிவடைய இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளதால், ரூ.12,500 வரை சலுகை வழங்க ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா மோட்டார்சைக்கிள், ஸ்கூட்டர் இந்தியா ஆகிய நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
ப்ரீமியம் பைக்களுக்கு ரூ.7500 வரையிலும், ஆரம்ப நிலையிலான மாஸ் மார்க்கெட் மோட்டார் சைக்கிள்களுக்கும் ரூ.5000 வரை சலுகைகள் வழங்க ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஹோண்டா மோட்டார்சைக்கிள், ஸ்கூட்டர் இந்தியா ஆகிய நிறுவனங்கள் ரூ.10,000 வரை தள்ளுபடி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|