வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
நிதியாண்டின் இறுதி நாளில் சாதனை படைத்த நிப்டி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
30 மார்2017
16:22
மும்பை : 2016-2017 ம் நிதியாண்டின் இறுதி வர்த்தக நாளான இன்று (மார்ச் 30) நிப்டி முன்பு எப்போது இல்லாத அளவிற்கு 9150 புள்ளிகள் மேல் உயர்வுடன் நிறைவடைந்துள்ளது. இதே போன்று மும்பை பங்குச்சந்தையான சென்செக்சும் 116 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து, வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.
இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 115.99 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 29,647.42 புள்ளிகளாகவும், நிப்டி 29.95 புள்ளிகள் உயர்ந்து 9173.75 புள்ளிகளாகவும் இருந்தது. இதற்கு முன் மார்ச் 17 ம் தேதி 9160.05 புள்ளிகளை எட்டியதே நிப்டியின் அதிகபட்ச சாதனையாக கருதப்பட்டது. இன்றைய வர்த்தக நேர முடிவில் முந்தைய சாதனையை நிப்டி முறியடித்துள்ளது, முதலீட்டாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
ஜிஎஸ்டி மசோதாக்களுக்கு லோக்சபா ஒப்புதல் அளித்து விட்டதால், ஜூலை 1 ம் தேதி முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான நேரடி வரி வசூல் அமல்படுத்தப்பட உள்ளது உறுதியாகி உள்ளது. இதனால் ஏற்பட்ட நம்பிக்கையின் காரணமாகவே இந்திய பங்குச்சந்தைகள், ஒரே மாதத்தில் 2வது முறையாக புதிய உச்சத்தை எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 30,2017
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 30,2017
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 30,2017
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 30,2017
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!