அதிவேக இன்டர்நெட் சேவை வழங்கும் முதல் நகரம் ஐதராபாத்அதிவேக இன்டர்நெட் சேவை வழங்கும் முதல் நகரம் ஐதராபாத் ... மாலை நேர நிலவரம் : தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 சரிவு மாலை நேர நிலவரம் : தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 சரிவு ...
அடுத்த அதிரடிக்கு தயாராகிறதா ஜியோ ?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மார்
2017
16:11

புதுடில்லி : ரிலையன்ஸ் ஜியோ இலவசங்கள் இன்றுடன் நிறைவு பெற இருக்கிறது. இதன் பின் ஜியோ பயன்படுத்துவோருக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாளை முதல் ஜியோ கட்டண சேவைகள் துவங்கவுள்ள நிலையில் பல்வேறு புதிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் ஜியோ இலவசங்கள் மேலும் நீட்டிக்கப்படலாம் என்றும், இதற்கான அறிவிப்பு இன்றே வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது. தற்சமயம் வரை 5 கோடி பேர் ஜியோ சேவைகளை தொடர்ந்து பயன்படுத்த கட்டணம் செலுத்தியுள்ளதாக ஜியோ தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜியோ சேவைகளை (பிரைம் திட்டம்) தொடர்ந்து பயன்படுத்துவோருக்கு அந்நிறுவனம் புதிய சலுகைகளை அறிவிக்கலாம் என டெலிகாம் வட்டாரங்களில் இருந்து வெளியாகும் தகவல்களில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே 5 கோடி பேர் ஜியோ சலுகைகளுக்கான கட்டணம் செலுத்தி விட்ட நிலையில் மீதமுள்ள 5 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை தக்கவைத்து கொள்ள புதிய சலுகை திட்டங்களை ஜியோ அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கென ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஜியோ பயனர்களின் பயன்பாட்டை டிராக் செய்து அதற்கேற்ப புதிய சலுகைகள் அறிவிக்கப்படும் என தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியாக ஜியோவின் புதிய சலுகைகள் மூன்று விஷயங்களை அடிப்படையாக கொண்டு அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
முதலில் ஜியோ பிரைம் திட்டத்துடன் எத்தனை பேர் கூடுதல் சலுகைகளுக்கு ரீசார்ஜ் செய்துள்ளனர், பின் எத்தனை பேர் ஜியோவை தவிர்த்து மற்ற சேவைகளை பயன்படுத்த இருக்கின்றனர் என்றும் மூன்றாவதாக எத்தனை பேர் ஜியோ சிம் கார்டினை துண்டிக்கின்றனர் போன்றவை டிராக் செய்யப்படும். பின் இவற்றை கொண்டு வாடிக்கையாளர்களின் நடவடிக்கைக்கு ஏற்ப புதிய சலுகைகளை ஜியோ அறிவிக்கும் என கூறப்படுகின்றது. ஏப்ரல் 1-ந்தேதி ஜியோவின் கட்டண சேவைகள் துவங்கிய சில நாட்களுக்குள் புதிய சலுகைகளை வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை ஜியோ வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)