பதிவு செய்த நாள்
02 ஏப்2017
04:26
கோல்கட்டா;டாடா குழுமத்தைச் சேர்ந்த, டாடா மோட்டார்ஸ், கார், லாரி உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், உள்நாட்டில் கார் உற்பத்தியில், மூன்றாவது இடத்தை பிடிக்க முடிவு செய்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் அதிகாரி விவேக் ஸ்ரீவத்சா கூறியதாவது:நிறுவனத்தின் கார்கள் விற்பனை, சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது. டியாகோ மாடல் கார் அறிமுகம் செய்த ஓராண்டில், 83 ஆயிரம் கார்கள் பதிவு செய்யப்பட்டன. அதில், 50 ஆயிரம் டெலிவரி செய்யப்பட்டு உள்ளது. மாதந்தோறும், 5,000 டியாகோ கார் விற்பனையாகிறது. ஹெக்ஸா மாடல் காரும் அதிகம் விற்பனையாகிறது.
கடந்த ஓராண்டில், நிறுவனத்தின் வளர்ச்சி சிறப்பாக இருந்தது. குறிப்பாக, மேற்கு வங்கத்தில் மட்டும், 22 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. தற்போது, உள்நாட்டு கார்கள் உற்பத்தியில், டாடா மோட்டார்ஸ், நான்காவது இடத்தில் உள்ளது. வரும், 2019ல், மூன்றாவது இடத்துக்கு முன்னேற திட்டமிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|