பதிவு செய்த நாள்
02 ஏப்2017
04:32
மும்பை;எஸ்.பி.ஐ., எனப்படும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உடன், அதன் ஐந்து துணை வங்கிகளும், பாரதிய மகிளா வங்கியும், நேற்று, முறைப்படி இணைந்தன.
இதையடுத்து, ஸ்டேட் பேங்க் ஆப் பிகானிர் அண்டு ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூரு, ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் ஐதராபாத் ஆகிய துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கியின் வாடிக்கையாளர்கள், எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்களாக மாறியுள்ளனர்.இது, இந்திய வங்கி வரலாற்றில், மிகப்பெரிய இணைப்பு நடவடிக்கையாக கருதப்படுகிறது. இதன் மூலம், சர்வதேச அளவில், ‘டாப் – 50’ வங்கிகளில் ஒன்றாக, எஸ்.பி.ஐ., உயர்ந்துள்ளது.
இந்த இணைப்பு மூலம், 33.50 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், 24 ஆயிரம் கிளைகள், 59 ஆயிரம் ஏ.டி.எம்.,கள், 50 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட வங்கியாக, எஸ்.பி.ஐ., உருவெடுத்துள்ளது. வங்கி ஊழியர்கள் எண்ணிக்கை, 2,70,000 ஆக உயர்ந்துள்ளது.இந்த இணைப்பால், வங்கியின் நடைமுறை செலவினங்கள் குறைந்து, நடப்பு நிதியாண்டில், 1,000 கோடி ரூபாய் வரை மிச்சமாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|