பதிவு செய்த நாள்
02 ஏப்2017
04:33
புதுடில்லி:மத்திய அரசு, கடந்த, 2016 – 17ம் நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களில், குறிப்பிட்ட சதவீத பங்கு விற்பனை மூலம், 46,247 கோடி ரூபாய் திரட்டியுள்ளது. இது, மத்திய பட்ஜெட்டின் மறுமதிப்பீட்டு அளவான, 45,500 கோடி ரூபாயை விட அதிகம்.முன்னதாக, கடந்த நிதியாண்டில், பொதுத் துறை பங்கு விற்பனை மூலம், 56,500 கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.வேறு எந்த ஆண்டிலும் இல்லாத வகையில், கடந்த நிதிஆண்டில், பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம், அதிக அளவிலான நிதியை, மத்திய அரசு திரட்டியுள்ளது.
பொதுத் துறையைச் சேர்ந்த, நேஷனல் அலுமினியம், கோல் இந்தியா, என்.எம்.டி.சி., – எம்.ஓ.ஐ.எல்., பாரத் எலக்ட்ரானிக்ஸ், என்.எச்.பி.சி., – நெய்வேலி லிக்னைட் ஆகிய ஏழு நிறுவனங்களின் பங்குகளை திரும்பப் பெறும் நடைமுறையின் மூலம் மட்டும், 19 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப்பட்டு உள்ளது. இது, பங்கு விற்பனையில் திரட்டிய மொத்த தொகையில், ௪௧ சதவீதமாகும்.
இத்துடன், ஆக்சிஸ் பேங்க், எல் அண்டு டி, ஐ.டி.சி., மற்றும் யு.டி.ஐ., கீழ் உள்ள நிறுவனங்களில், பங்கு விற்பனை மூலம், மத்திய அரசுக்கு, 10,800 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.இது தவிர, பொதுத் துறையைச் சேர்ந்த, முக்கிய நிறுவனங்களை உள்ளடக்கிய, சி.பி.எஸ்.இ., எக்ஸ்சேஞ் டிரேடட் பண்டு வாயிலான விற்பனை மூலம், மத்திய அரசு, 8,500 கோடி ரூபாய் ஈட்டிஉள்ளது.நடப்பு, 2017 – 18ம் நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம், 72,500 கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|