பதிவு செய்த நாள்
03 ஏப்2017
00:49
கிரெடிட் கார்டு வசதியானது என்றாலும், இதன் பயன்பாட்டில் கவனம் தேவை. குறிப்பாக, முதன்முறையாக கிரெடிட் கார்டு பயன்படுத்த இருப்பவர்கள், கார்டு பெறுவதற்கு முன் அறிந்திருக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் சில இருக்கின்றன
கிரெடிட் கார்டு பயன்பாடு, பலவித கட்டணங்களுக்கு உட்பட்டது. உறுப்பினராக இணையும் கட்டணம், வருடாந்திர கட்டணம், அறிக்கைகளுக்கான கட்டணம், பதில் கார்டு கட்டணம், சர்சார்ஜ், சேவை வரி ஆகியவை உண்டு. இவற்றோடு பரிவர்த்தனை தொடர்பான வட்டியும் உண்டு. எனவே, கிரெடிட் கார்டு என்பது, இலவசமானது அல்ல என்பதை முதலில் மனதில் கொள்ளவும். மேலும், கார்டுகளுக்கு கடன் வரம்பு உண்டு. அவற்றை மீறி பயன்படுத்தும் போது, அதற்கான கட்டணம் வசூலிக்கப்படலாம். பொதுவாக, குறிப்பிட்ட காலம் வரை, பரிவர்த்தனை தொகைக்கு வட்டி கிடையாது. 40 முதல், 52 நாட்கள் வரை இதற்கான அவகாசம் அளிக்கப்படும். அதன்பின், வட்டி வசூலிக்கப்படும். இந்த வட்டி விகிதம், 1.5 முதல், 3.5 சதவீதம் வரை இருக்கும். இது, குறைவாக தோன்றினாலும், ஆண்டு அடிப்படையில் பார்த்தால், 20 முதல், 40 சதவீதம் வரை வரக்கூடும்.
எந்த கார்டு ஏற்றது?கட்டண விகிதங்களை அறிந்த பின், ஒருவர் தனக்கேற்ற கார்டை தேர்வு செய்ய வேண்டும். நிறுவனங்களும், வங்கிகளும் பலவிதமான கார்டுகளை வழங்குகின்றன. தேவை மற்றும் செலவு பழக்கங்களுக்கு பொருத்தமான அம்சங்களை கொண்ட கார்டை தேர்வு செய்வது நல்லது. உதாரணத்திற்கு, அடிக்கடி பயணம் செய்யும் பழக்கம் கொண்டவர்கள், ஓட்டல்கள், விமான டிக்கெட் ஆகியவற்றில் தள்ளுபடி புள்ளிகள் அளிக்கும் கார்டை தேர்வு செய்யலாம். ‘ஷாப்பிங்’க்காக அதிகம் கார்டு பயன்படுத்துவோர், ‘கேஷ் பேக்’ சலுகைகள் அளிக்கும் கார்டை தேர்வு செய்யலாம்.
பில் தேதிகிரெடி கார்டு பயன்பாடு தொடர்பான முக்கிய தேதிகளை, நினைவில் கொள்ள வேண்டும். பில் தேதி மற்றும் பணம் செலுத்தும் தேதி, இவற்றில் முக்கியமானவை. பில் தொகை வந்த பின், முழுத்தொகையை செலுத்தாவிட்டாலும், குறைந்தபட்ச தொகையை செலுத்த வேண்டும். இதனால், தாமதமாக பணம் செலுத்தும் கட்டணத்தை தவிர்க்கலாம். ஆனால், குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்தி வருவது, கடன் சுமைக்கே வழிவகுக்கும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|