பதிவு செய்த நாள்
03 ஏப்2017
00:50
இந்த ஆண்டு, காப்பீட்டுத் துறையில் குறைந்தது, மூன்று நிறுவனங்கள் பங்கு வெளியீட்டில், ஈடுபட இருப்பது பங்கு முதலீட்டாளர்கள் மத்தியில் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
புதிய பங்கு வெளியீடுகள் அண்மை காலமாக கவனத்தை ஈர்த்திருக்கின்றன. இந்த வரிசையில், இந்த ஆண்டு பங்கு முதலீட்டாளர்கள், காப்பீட்டுத் துறை பங்கு வெளியீட்டை எதிர்பார்க்கும் நிலை உருவாகி உள்ளது. காப்பீட்டு நிறுவனங்கள் சில பங்கு வெளியீட்டிற்கு ஆயத்தமாகி வருகின்றன. குறைந்தது, மூன்று நிறுவனங்கள் பங்கு வெளியீட்டில் ஈடுபடும் வாய்ப்பு இருப்பது பங்கு முதலீட்டாளர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.காப்பீட்டுத் துறையில் கடந்த, 2016ம் ஆண்டு, தனியார் காப்பீடு நிறுவனமான ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் பங்குகளை வெளியிட்டது.
பட்ஜெட் அறிவிப்புஇந்த ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த போது நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்கள் பங்குகளை வெளியிடும் வாய்ப்பு பற்றி தமது உரையில் குறிப்பிட்டார். அதன்படி தற்போது இந்த நிறுவனங்களில் சில பங்கு வெளியீட்டிற்கு தயாராகி வருகின்றன. இதற்கு முன், பொதுத் துறை வங்கிகளின் பங்கு வெளியீடு கவனத்தை ஈர்த்தன. இந்திய காப்பீட்டுத் துறையும் வங்கித் துறை போலவே பழமையானது என்றாலும், அண்மை காலமாக தான், சீர்த்திருத்தங்களை கண்டு வருகின்றன. கடந்த, 10 ஆண்டுகளில் விரிவாக்கம் மற்றும் தகவல்களை வெளியிடுவது ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
காப்பீட்டுத் துறைக்கான கட்டுப்பாட்டு அமைப்பான, இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., 2000ல் ஏற்படுத்தப்பட்டு, காப்பீட்டுத் துறையில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன. தற்போது காப்பீட்டுத் துறை நிறுவனங்கள், பங்கு வெளியீட்டிற்கு ஆயத்தமாவது, வெளிப்படையான முறையில் தகவல்களை பகிர்வதில் மேலும் முன்னேற்றத்தைக் கொண்டு வரும் என, இத்துறை வல்லுனர்கள் கருதுகின்றனர். நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு பதில் சொல்ல கடமைபட்டவையாக மாறும் என்கின்றனர்.
10 ஆண்டுகளுக்கு முன் வரை, பாலிசி விபரங்கள், கிளைம் விபரங்கள், சரண்டர் விகிதம் போன்றவற்றில் வெளிப்படைத் தன்மை அதிகம் இருக்கவில்லை. எனினும், காப்பீட்டுத் துறை வெளிப்படையாக்கப்பட்ட பின் தகவல்களை பகிர்வது அதிகரித்துஇருப்பதாக வல்லுனர்கள் கருதுகின்றனர். பங்குச்சந்தையில் நுழைந்து, நிதி திரட்டும் திட்டம், இவற்றை மேலும் அதிகமாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல்கள் பகிர்வுஏனெனில், பங்கு வெளியீட்டிற்கு வரும் எந்த நிறுவனமும் முன்கூட்டியே தயாராக வேண்டும். அவை மேலும் சிறந்த முறையில் தகவல்களை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள வேண்டும். கடந்த, 2014ல், பங்கு வெளியீட்டிற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படும் வரை பல நிறுவனங்கள் தகவல்களை பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை என, வல்லுனர்கள் கூறுகின்றனர். இப்போது பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள், சில பங்கு வெளியீட்டிற்கு ஆயத்தமாகி வருகின்றன. இது பங்கு முதலீட்டாளர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்திஇருந்தாலும், வெற்றிகரமான பட்டியலிடுதல் எளிதாக இருக்காது என்ற கருத்தும் உள்ளது.
ஆய்வு செய்யும் முறைகாப்பீட்டு நிறுவனங்கள் குறிப்பாக ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் நிதி தொடர்பான தகவல்களை வெளியிடுவதில் தங்களுக்கே உரிய வழிகளை கையாள்கின்றன. இது வங்கிகள் மற்றும் நிதி சேவை நிறுவனங்கள் பின்பற்றும் முறையில் இருந்து மாறுபட்டது. வருவாய் மற்றும் செலவுகளில் பல அடுக்குகளை கொண்டது.முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, ஆயுள் காப்பீட்டு நிறுவன வர்த்தகத்தை விட, பொது காப்பீட்டு நிறுவனங்களின் வர்த்தகம் எளிதாக புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும் என, கருதப்படுகிறது. இந்த பிரிவில், லாபம் – நஷ்டம் தொடர்பான தகவல்கள் உடனடியாக கிடைக்க கூடியவை என்பதால், பங்குகளின் மதிப்பை கண்டறிவது சாத்தியம். இந்த நிறுவனங்கள் பட்டியலிடப்படும் போது, அவற்றின் செயல்பாடு தொடர்பான தரவுகளை அலசி ஆராய்வது சாத்தியம்.
பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் இந்த ஆண்டு பங்கு வெளியீட்டில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது. எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ் நிறுவனமும் பங்கு வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இந்த ஆண்டு காப்பீட்டுத் துறைக்கான திருப்பு முனையாக அமையலாம் என, கருதப்படுகிறது. பங்குச்சந்தையில் பொதுவாக காணப்படும் தன்மையும், இவற்றுக்கு சாதகமாக அமையலாம் என, கருதப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|