பதிவு செய்த நாள்
03 ஏப்2017
00:53
இன்னொரு நிதி ஆண்டு நிறைவு பெற்றுள்ளது... முடிந்த ஆண்டின் கதையை, புள்ளி விபரங்கள் வழியாக பார்த்தால் எப்படி இருக்கும்?
முடிந்த ஆண்டு குறித்து, நாம் கொண்டுள்ள மதிப்பீடுகள் சரியா? முதலீட்டாளர்களின் நினைவாற்றல், உண்மையில் மிகக் குறுகிய அளவு கொண்டது என்பதே உண்மை. ஓராண்டிற்குள், அந்த ஆண்டின் நிகழ்வுகளை மறக்கக் கூடிய மனப்போக்கு கொண்டவர்களாகவே, பெருவாரியான முதலீட்டாளர்கள் இருக்கின்றனர். ஆகவே, ஓராண்டை பற்றி நாம் கொண்டுள்ள மனப்பதிவுகள், பல நேரங்களில் உண்மைக்கு சற்று புறம்பாகவே கூட அமைந்து விடுகின்றன. இதோ, புள்ளி விபரங்கள் சொல்லும் கதையை பார்ப்போம்... கூடவே, எண்கள் பொய் சொல்வதில்லை என்பதையும், நினைவில் கொள்வோம்!
* கடந்த ஆண்டு, பங்குச் சந்தையின் குறியீடான, ‘நிப்டி’ 18.94 சதவீதம் அதிகரித்தது.* கச்சா எண்ணெயின் விலை, 35.31 சதவீதம் அதிகரித்தது.* டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, 66.36ல் துவங்கி, 64.9 ஆக அதிகரித்து முடிந்தது.* உலக முதலீட்டாளர்கள் (எப்.ஐ.ஐ.,) 25,590 கோடி ரூபாய்க்கு, இந்திய பங்குகளை வாங்கினர்.* உள்நாட்டு பரஸ்பர நிதிகளும், 26,730 கோடி ரூபாய்க்கு, நம் பங்குகளை வாங்கின.* இருதரப்பும், இந்திய சந்தையில், 52,320 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்ததே, சந்தையின் உயர்வுக்கு வழிவகுத்தது என, சொல்லலாம்.* இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு, 359.7 பில்லியன் டாலரில் இருந்து, 366.7 பில்லியன் டாலராக உயர்ந்தது.* தங்கத்தின் வர்த்தகம், 2,800 ரூபாயில் துவங்கி, 2,941 ரூபாயில் முடிந்தது. விலை உயர்வு வெறும், 5.04 சதவீதம் மட்டுமே.* மாதந்தோறும், இந்திய முதலீட்டாளர்கள், 4,050 கோடி ரூபாயை, முறையான முதலீட்டு திட்டம் (எஸ்.ஐ.பி.,) மூலம் செலுத்துகின்றனர். இது, வரலாறு காணாத குறியீடு.* நிப்டியின் பி.ஈ., அளவு, அடுத்த ஆண்டின் ரொக்க லாபத்தை விட, 19 மடங்கு உள்ளது. இது, சமீப வரலாற்றில் இருந்ததில்லை.* மிட்காப், 100 குறியீட்டின் மதிப்பு, ரொக்க லாபத்தை விட, 33 மடங்கு அதிகம் உள்ளது. இது மதிப்பீட்டளவில் மிக அதிகம்.
சரி, இந்த குறியீடுகள் சொல்லும் கதை தான் என்ன?கடந்த ஆண்டு, இந்திய பங்குகளின் மீது, நம் மக்களின் நம்பிக்கை அபார மாக உயர்ந்து நிற்கிறது. இந்த நம்பிக்கை தொடர்ந்து நிலைக்க, பொருளாதார வளர்ச்சி கூடி, நிறுவனங்களின் வருவாயும், லாபக் கணக்கும் வெகுவாக உயர வேண்டும். அடிப்படையில், ஒட்டுமொத்த நிறுவனங்களின் லாப வளர்ச்சியே, சந்தையின் தொடர் ஏற்றத்திற்கு அத்தியாவசியம். அதை ஏற்படுத்த வேண்டிய முக்கிய துறைகள், கடந்த ஆண்டு சந்தித்த தேக்கமும், மந்தமும் விரைவில் விலக வேண்டும். சந்தையில் தொடர்ந்து மந்த நிலை காணும் அரசு வங்கிகள், மின் உற்பத்தி துறை சார்ந்த நிறுவனங்கள், கனரக தொழில்கள் மற்றும் ஏற்றுமதி சார்ந்த தொழில்களில், மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்ப வேண்டும். ஆக, முடிந்த ஆண்டில், பங்குச் சந்தையின் நகர்வில், முக்கிய பங்கு வகித்த நிறுவனங்கள், தொடர்ந்து சந்தையின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ய வேண்டும்.
மேலும், புதிய நிறுவனங்கள் பல சந்தையின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் அபார வளர்ச்சி காண வேண்டும். ஏமாற்றங்களை எளிதில் ஜீரணிக்கக் கூடிய நிலையில் சந்தை இல்லை என்பதை, நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதே நேரம், நிறுவனங்கள் கொடுக்கும் இன்ப அதிர்ச்சி, சந்தையால் கொண்டாடப்படும். ஒவ்வொரு நிதி ஆண்டும், சந்தையின் போக்கில் ஒரு புதிய நகர்வை ஏற்படுத்தும். வரும் ஆண்டும், இதற்கு விதிவிலக்கு அல்ல.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|