பதிவு செய்த நாள்
06 ஏப்2017
13:52
புதுடில்லி: இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல், ரொக்கமாக பரிமாற்றம் செய்ய கூடாது என்ற தடைக்கு மத்திய நேரடி வரி வாரியம் புது விளக்கம் அளித்துள்ளது.
மத்திய அரசு கறுப்பு பண புழக்கத்தை ஒழிக்க, கடந்த ஆண்டு நவ.,8 ம் தேதி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்றது. இதற்கு பதிலாக, புதிய 500 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. கடந்த பிப்., 1ம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ‛ஒரு நாளைக்கு ஒரு நபர், மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பரிமாற்றம் செய்ய கூடாது'என, அறிவித்தார்.
பின்னர் இந்த பரிமாற்ற கட்டுப்பாடு, இரண்டு லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டது. 2017ம் ஆண்டுக்கான நிதி மசோதாவில் இதற்கான திருத்தம் கொண்டு வரப்பட்டு, பார்லிமென்ட்டிலும் நிறைவேற்றப்பட்டு விட்டது.
புது விளக்கம்
இந்த சூழ்நிலையில் மத்திய நேரடி வரி வாரியம் புது விளக்கத்துடன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ‛ஒரு நாளைக்கு, ஒரு நபர் இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பரிமாற்றம் செய்ய கூடாது என்ற கட்டுப்பாடு, வங்கிகள், தபால் நிலைய சேமிப்பு கணக்குகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் இருந்து பணத்தை எடுப்பதற்கு பொருந்தாது'என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வங்கிகளில் இருந்து ஒரு நாளைக்கு ஒரு நபர் இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|