தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு ... இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதமாக உயரும் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதமாக உயரும் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரூ.2 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக மாற்ற தடையா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஏப்
2017
13:52

புதுடில்லி: இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல், ரொக்கமாக பரிமாற்றம் செய்ய கூடாது என்ற தடைக்கு மத்திய நேரடி வரி வாரியம் புது விளக்கம் அளித்துள்ளது.
மத்திய அரசு கறுப்பு பண புழக்கத்தை ஒழிக்க, கடந்த ஆண்டு நவ.,8 ம் தேதி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்றது. இதற்கு பதிலாக, புதிய 500 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. கடந்த பிப்., 1ம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ‛ஒரு நாளைக்கு ஒரு நபர், மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பரிமாற்றம் செய்ய கூடாது'என, அறிவித்தார்.
பின்னர் இந்த பரிமாற்ற கட்டுப்பாடு, இரண்டு லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டது. 2017ம் ஆண்டுக்கான நிதி மசோதாவில் இதற்கான திருத்தம் கொண்டு வரப்பட்டு, பார்லிமென்ட்டிலும் நிறைவேற்றப்பட்டு விட்டது.
புது விளக்கம்
இந்த சூழ்நிலையில் மத்திய நேரடி வரி வாரியம் புது விளக்கத்துடன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ‛ஒரு நாளைக்கு, ஒரு நபர் இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பரிமாற்றம் செய்ய கூடாது என்ற கட்டுப்பாடு, வங்கிகள், தபால் நிலைய சேமிப்பு கணக்குகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் இருந்து பணத்தை எடுப்பதற்கு பொருந்தாது'என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வங்கிகளில் இருந்து ஒரு நாளைக்கு ஒரு நபர் இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)