பதிவு செய்த நாள்
06 ஏப்2017
14:14
புதுடில்லி : 2017-18 ம் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதமாக உயரும் என ஆசிய வளர்ச்சி வங்கி (ஏடிபி) தெரிவித்துள்ளது. அடுத்த நிதியாண்டில் 7.6 சதவீதமாக உயர்ந்து சீனாவை முந்தும் எனவும் தெரிவித்துள்ளது.
ஆசிய வளர்ச்சி வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் உயர் மதிப்புடைய ரூ.500, 1000 நோட்டுக்களை அரசு வாபஸ் பெற்றது. இது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசின் இந்த அறிவிப்பால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் புழக்கத்தில் விடப்பட்டது. இது வர்த்தக நம்பிக்கையையும், முதலீட்டையும் ஊக்குவித்துள்ளது. இதன் காரணமாகவே 2016-17 ம் நிதியாண்டின் முடிவில் இந்தியாவின் வளர்ச்சி 7.1 சதவீதமாக இருந்தது.
சீனாவை பொருத்தவரை, 2017 ல் வளர்ச்சி விகிதம் மந்தமடைந்து 6.5 ஆகவே இருக்கும். 2018 ல் 6.2 ஆக சரிவடையும். இருந்தும் சீன அரசு தொடர்ந்து நிதித்துறையில் நிலைத்தன்மையை தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஜிஎஸ்டி, எப்டிஐ.,ல் தளர்வு என கடந்த சில ஆண்டுகளாக வர்த்தகத்தை மேம்படுத்த இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள், அதன் வளர்ச்சியை அதிகப்படுத்தி உள்ளது. ஜூலை மாதம் அமல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|