பதிவு செய்த நாள்
06 ஏப்2017
16:01
புதுடில்லி : எச்எம்டி குளோபல் தயாரித்து அறிமுகம் செய்த நோக்கியா 3310, நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 6 போன்களின் விற்பனை திட்டங்கள் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
எச்எம்டி குளோபல் எனும் நிறுவனம் நோக்கியா பிரான்டிங் பயன்படுத்தி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது. ஏற்கனவே அறிவித்ததை போன்று எச்எம்டி குளோபல் நிறுவனம் சில நோக்கியா போன்களை பார்சிலோனாவில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்ப விழாவில் அறிமுகம் செய்தது. நோக்கியா 3310, நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 உள்ளிட்ட மாடல்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இவற்றின் விற்பனை இன்னும் துவங்கவில்லை. எதிர்பார்ப்புகளை ஏற்றி அமைதியாய் இருந்து வந்தாலும் நோக்கியா மொபைல் போன்களின் வெளியீடு சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்துவிட்டது.
அதன்படி நோக்கியா மொபைல் போன்கள் ஏப்ரல் மாத இறுதியில் மலேசியாவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நோக்கியா 3310 விற்பனை துவங்கி அதன்பின் மற்ற மாடல்களின் விற்பனை துவங்கலாம் என கூறப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் ஒரே சமயத்தில் பல்வேறு சந்தைகளிலும் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|