பதிவு செய்த நாள்
06 ஏப்2017
16:12
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று நாள் முழுவதும் சரிவுடனேயே காணப்பட்டன. ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை கமிட்டி கூட்டம் நடைபெறுவதால், புதிய அறிவிப்புக்களால் பங்குச்சந்தைகள் சரிவிலிருந்து மீளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வங்கிகள், ரியல் எஸ்டேட் துறைகளின் பங்குகள் சரிவுடனேயே இருந்ததால், பங்குச்சந்தைகளும் சரிவுடனேயே வர்த்தகத்தை நிறைவு செய்தன.
இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 46.90 புள்ளிகள் சரிந்து 29,927.34 புள்ளிகளாகவும், நிப்டி 13.30 புள்ளிகள் சரிந்து 9251.85 புள்ளிகளாகவும் இருந்தது. எஸ்பிஐ, ஐடிசி, ஹிண்டல்கோ உள்ளிட்ட நிறுவன பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. நிப்டி 9200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த போதிலும், சரிவுடனேயே காணப்பட்டது முதலீட்டாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|