பதிவு செய்த நாள்
10 ஏப்2017
07:40
பணத்தை திட்டமிட்டு சேமித்து, படிப்படியாக செல்வந்தராகும் கோட்பாட்டில் இருந்து மாறுபட்டு, வேகமாக செல்வ வளம் பெறுவதற்கான வழியை, ‘தி மில்லினர் பாஸ்ட்லேன்’ புத்தகத்தில் எம்.ஜே.டிமார்கோ விவரிக்கிறார்:
நீங்கள் பெற விரும்புவதை தொடர்ந்து பெற விரும்பினால், நீங்கள் செய்து கொண்டிருப்பதை தொடர்ந்து செய்யவும். ஆனால், நீங்கள் செல்வ வளம் பெறவில்லை எனில், நிறுத்திக் கொள்ளவும். சொகுசு கார்களை இயக்கி கொண்டு, விமானங்களில் பறந்து கொண்டிருப்பவர்கள் படிப்படியாக பணக்காரர்களாக உருவானவர்கள் அல்ல. இந்த முறை தவறானது. ஏனெனில், இதற்கு வாழ்நாள் முழுவதும் தேவை. இதன் மூலம் பணக்காரராக ஆனாலும், அதை அனுபவிக்கும் போது வயதாகிவிடும். பணக்கார ராவது நிறுவனங்களை விற்பது, ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது போன்ற நிகழ்வுகளில் இல்லை, அதன் பின், உள்ளே செயல்முறை மற்றும் கடின உழைப்பில் இருக்கிறது. செயல்முறையே இல்லாமல் நிகழ்வுகள் இல்லை. செல்வந்தராகும் தகுதி பெற்றிருப்பதற்கு பலரும் பல காரணங்களை கூறலாம். ஆனால், இவை எதுவும் முக்கியம் இல்லை. புத்திசாலித்தனமான ரிஸ்க், கடின உழைப்பு, இடைவிடாத முயற்சி மூலமே இது சாத்தியம்.மூன்று வகையான நிதிப்பாதைகள்:
நடைபாதை வழி: நாளைய பாதுகாப்பு பற்றி கவலைப்படாமல் இன்று வசதியாக வாழும் வழி. இந்த பாதை ஏழ்மையை நோக்கி செல்வது.மெதுவான வழி: நாளைய வாழ்க்கை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இன்று தியாகம் செய்வது. விரைவு வழி: அடுத்த, 5 அல்லது 10 ஆண்டுகளில் பணக்காரராகும் வகையில், மக்கள் மதிப்பு மிக்கதாக கருதும் ஒன்றை உருவாக்க கடினமாக உழைப்பது.
நடைபாதை வழியை பின்பற்றுபவர்கள் கடனை ஒரு சொத்தாக கருதுகின்றனர். கடன் வாங்கி எல்லாவற்றையும் வாங்குகின்றனர். இவர்கள் அதிகம் திட்டமிடுவதில்லை. செல்வந்தராக இருப்பது என்பது அதிக பணம் வைத்திருப்பதோ, சொகுசு கார்கள் வைத்திருப்பதோ அல்ல. செல்வம் என்பது ஆரோக்கியமாக இருப்பது, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நல்ல உறவு கொண்டிருப்பது மற்றும் நினைத்ததை செய்யும் நிதி சுதந்திரம் பெற்றிருப்பது.
ஆரோக்கியம் மற்றும் செல்வம் இரண்டுக்குமே கடின உழைப்பு, சீரான முயற்சி தேவை. நல்ல செயல்முறை மற்றவர்களுக்கு அதிர்ஷ்டமாக தோன்றலாம். ஒருவர், அதிர்ஷ்டத்தால் செல்வந்தராக மாறினார் என, நினைப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும். செல்வத்தை சேர்க்க சரியான வழி, செலவுகளை கட்டுப்படுத்துவதும், வருவாயை பல மடங்கு அதிகரிப்பதாகும். விரைவு பாதையில் முன்னேறுபவர்கள் மற்றவர்களுக்கு வேலை அளிப்பவர்களாக இருப்பர். கடனை வருவாயை அதிகரிப்பதற்கான கருவியாகவும், நேரத்தை சொத்தாகவும் கருதுபவர்கள்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|