இந்திய கைவினைஞர்களை கை துாக்கி விட  ஆடம்பர பொருட்கள் துறையினர் ஆதரவு தேவை - மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்இந்திய கைவினைஞர்களை கை துாக்கி விட ஆடம்பர பொருட்கள் துறையினர் ஆதரவு தேவை ... ... கனவு வீடு தேடலில் உதவும் இணைய ஆய்வு கனவு வீடு தேடலில் உதவும் இணைய ஆய்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
உங்­களை செல்­வந்­த­ராக்கும் விரை­வுப்­பாதை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2017
07:40

பணத்தை திட்­ட­மிட்டு சேமித்து, படிப்­ப­டி­யாக செல்­வந்­த­ராகும் கோட்­பாட்டில் இருந்து மாறு­பட்டு, வேக­மாக செல்வ வளம் பெறு­வதற்­கான வழியை, ‘தி மில்­லினர் பாஸ்ட்லேன்’ புத்­த­கத்தில் எம்.ஜே.டிமார்கோ விவ­ரிக்­கிறார்:
நீங்கள் பெற விரும்­பு­வதை தொடர்ந்து பெற விரும்­பினால், நீங்கள் செய்து கொண்­டி­ருப்­பதை தொடர்ந்து செய்­யவும். ஆனால், நீங்கள் செல்வ வளம் பெற­வில்லை எனில், நிறுத்திக் கொள்­ளவும். சொகுசு கார்­களை இயக்கி கொண்டு, விமா­னங்­களில் பறந்து கொண்­டி­ருப்­ப­வர்கள் படிப்­ப­டி­யாக பணக்­கா­ரர்­க­ளாக உரு­வா­ன­வர்கள் அல்ல. இந்த முறை தவ­றா­னது. ஏனெனில், இதற்கு வாழ்நாள் முழு­வதும் தேவை. இதன் மூலம் பணக்­கா­ர­ராக ஆனாலும், அதை அனு­ப­விக்கும் போது வய­தா­கி­விடும். பணக்­கா­ர ரா­வது நிறு­வ­னங்­களை விற்­பது, ஒப்­பந்­தங்­களில் கையெ­ழுத்­தி­டு­வது போன்ற நிகழ்­வு­களில் இல்லை, அதன் பின், உள்ளே செயல்­முறை மற்றும் கடின உழைப்பில் இருக்­கி­றது. செயல்­மு­றையே இல்­லாமல் நிகழ்­வுகள் இல்லை. செல்­வந்­த­ராகும் தகுதி பெற்றிருப்­ப­தற்கு பலரும் பல காரணங்­களை கூறலாம். ஆனால், இவை எதுவும் முக்­கியம் இல்லை. புத்­தி­சா­லித்­த­ன­மான ரிஸ்க், கடின உழைப்பு, இடை­வி­டாத முயற்சி மூலமே இது சாத்­தியம்.மூன்று வகை­யான நிதிப்­பா­தைகள்:
நடை­பாதை வழி: நாளைய பாது­காப்பு பற்றி கவ­லைப்­ப­டாமல் இன்று வச­தி­யாக வாழும் வழி. இந்த பாதை ஏழ்­மையை நோக்கி செல்­வது.மெது­வான வழி: நாளைய வாழ்க்கை பாது­காப்­பாக இருக்க வேண்டும் என்­ப­தற்­காக இன்று தியாகம் செய்­வது. விரைவு வழி: அடுத்த, 5 அல்­லது 10 ஆண்­டு­களில் பணக்­கா­ர­ராகும் வகையில், மக்கள் மதிப்பு மிக்­க­தாக கருதும் ஒன்றை உரு­வாக்க கடி­ன­மாக உழைப்­பது.
நடை­பாதை வழியை பின்­பற்­று­பவர்கள் கடனை ஒரு சொத்­தாக கரு­து­கின்­றனர். கடன் வாங்கி எல்­லா­வற்­றையும் வாங்­கு­கின்­றனர். இவர்கள் அதிகம் திட்­ட­மி­டு­வ­தில்லை. செல்­வந்­த­ராக இருப்­பது என்­பது அதிக பணம் வைத்­தி­ருப்­பதோ, சொகுசு கார்கள் வைத்­தி­ருப்­பதோ அல்ல. செல்வம் என்­பது ஆரோக்­கி­ய­மாக இருப்­பது, நண்­பர்கள் மற்றும் குடும்­பத்­தி­ன­ருடன் நல்ல உறவு கொண்­டி­ருப்­பது மற்றும் நினைத்­ததை செய்யும் நிதி சுதந்­திரம் பெற்­றி­ருப்­பது.
ஆரோக்­கியம் மற்றும் செல்வம் இரண்­டுக்­குமே கடின உழைப்பு, சீரான முயற்சி தேவை. நல்ல செயல்­முறை மற்­ற­வர்­க­ளுக்கு அதிர்ஷ்­ட­மாக தோன்­றலாம். ஒருவர், அதிர்ஷ்­டத்தால் செல்­வந்­த­ராக மாறினார் என, நினைப்­பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்­வ­தாகும். செல்­வத்தை சேர்க்க சரி­யான வழி, செல­வு­களை கட்­டுப்­ப­டுத்­து­வதும், வரு­வாயை பல மடங்கு அதி­க­ரிப்­பதாகும். விரைவு பாதையில் முன்­னே­று­ப­வர்கள் மற்­ற­வர்­க­ளுக்கு வேலை அளிப்­ப­வர்­க­ளாக இருப்­பர். கடனை வரு­வாயை அதி­க­ரிப்­ப­தற்­கான கரு­வி­யா­கவும், நேரத்தை சொத்­தா­கவும் கரு­து­பவர்கள்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)