கனவு வீடு தேடலில் உதவும் இணைய ஆய்வுகனவு வீடு தேடலில் உதவும் இணைய ஆய்வு ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.34 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.34 ...
இந்­தி­யாவின் இணை­ய­தள பொரு­ளா­தாரம் 25,000 கோடி டால­ராக அதி­க­ரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2017
07:46

புது­டில்லி : 'இந்­தி­யாவில், இணை­ய­தளம் சார்ந்த பொரு­ளா­தார வளர்ச்சி, 2020ல், இரு மடங்கு உயர்ந்து, 25 ஆயிரம் கோடி டால­ராக அதி­க­ரிக்கும்' என, ஆய்­வொன்றில் தெரி­ய­வந்­துள்­ளது.

இந்­தி­யாவில் இணை­யத்தின் வளர்ச்சி குறித்து, பாஸ்டன் கன்­சல்டிங் குரூப் மற்றும் இந்தஸ் என்­டர்­பி­ரைனர்ஸ் நிறு­வ­னங்கள் இணைந்து ஆய்­வ­றிக்கை வெளி­யிட்­டுள்­ளன.
அதன் விபரம் :இந்­தி­யாவில், இணை­யத்தின் பயன்­பாடு மிக வேக­மாக அதி­க­ரித்து வரு­கி­றது. இந்த வளர்ச்­சிக்கு, 'இ – காமர்ஸ்' எனப்­படும், வலை­தளம் சார்ந்த வர்த்­தகம் மற்றும் நிதிச் சேவைகள் முக்­கிய கார­ணி­க­ளாக உள்­ளன. உதா­ர­ண­மாக, 2020ல், 'டிஜிட்டல் பேமன்ட்' எனப்­படும், மின்­னணு பணப் பரி­வர்த்­த­னைகள், இரு மடங்கு உயர்ந்து, 30 – 40 சத­வீதம் அதி­க­ரிக்கும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.மின்­னணு தொழில்­நுட்பம், மக்கள் சார்ந்த, பல்­வேறு சமூக நல செயல்­களின் பயன்­பாட்­டிற்கு உத­வு­கி­றது. மிகச் சுல­ப­மாக தொழில் புரிய துணை நிற்­கி­றது. எண்­ணற்ற சேவைகள் மற்றும் பொருட்­களை எளி­தாக அணுகி, பெற உத­வு­கி­றது. அனைத்து துறை­க­ளிலும், இணை­யத்தின் பங்­க­ளிப்பு அத்­தி­யா­வ­சி­மாக உள்­ளது.
இணைய தொழில்­நுட்­பத்தில், அடுத்த கட்­ட­மாக, 'இன்­டர்நெட் ஆப் திங்ஸ்' எனப்­படும் சாத­னங்கள் இடை­யி­லான இணைய பயன்­பாடு பெருகி வரு­கி­றது. இதையும் தாண்டி, ' இன்­டெர்நெட் ஆப் எவ்­வரி திங்ஸ்' எனப்­படும், அனைத்து பயன்­பாட்­டிலும், இணையம் தவிர்க்க முடி­யாத அங்­க­மாக உரு­வெ­டுக்கும். அத்­த­கைய சூழலில், எண்­ணற்ற துறை­களில் பெருகும் எண்­ணி­ல­டங்­காக வர்த்­த­கங்கள், இந்­தி­யாவின் பொரு­ளா­தார வெற்­றிக்கு உதவும்.இத்­த­கைய எழுச்­சிக்கு, மொபைல்போன் வாயி­லான இணைய பயன்­பாடு, மிகவும் இன்­றி­ய­மை­யாத வகையில் துணை நிற்கும் எனலாம். உல­க­ளவில், தற்­போது, மொபைல்போன் மூலம் இணையம் பயன்­ப­டுத்­துவோர் அதிகம் உள்ள நாடு­களில், இந்­தியா இரண்­டா­வது இடத்தில் உள்­ளது. இங்கு, 39 கோடி பேர், மொபைல்போன் மூலம், இணை­யத்தில் உலா வரு­கின்­றனர். இது, 2020ல், 65 கோடி­யாக உயரும்.
இதே காலத்தில், மொபைல்­போனில், 'டேட்டா' எனப்­படும் தக­வல்கள், படங்கள் போன்­ற­வற்றின் பரி­மாற்­றத்தில் ஈடு­ப­டுவோர், 10 – 14 மடங்கு பெரு­குவர். மொபைல்­போனில் அதி­வே­க­மாக இணை­யத்தை பயன்­ப­டுத்­துவோர் எண்­ணிக்கை, 55 கோடி­யாக உயரும். ஒருவர், மாதம், சரா­ச­ரி­யாக, 7 – 10 ஜி.பி., அள­விற்கு மொபைல்­போனில் தக­வல்­களை பரி­மாறிக் கொள்வார். இது, தற்­போது, 1ஜி.பி.,க்கும் குறை­வாக உள்­ளது. அடுத்த மூன்று ஆண்­டு­களில், '4ஜி' மொபைல்­போன்­களின் எண்­ணிக்கை, 6 மடங்கு உயர்ந்து, 55 கோடி­யாக பெருகும். இது, பயன்­பாட்டில் உள்ள மொபைல்­போன்­களில், 70 சத­வீ­த­மாக இருக்கும்.
மொபைல்­போனில் இணைய வச­திக்­கான கட்­டணம் குறைந்து வரு­வ­தாலும், அதன் பயன்­பாடு மக்­க­ளி­டையே அதி­க­ரித்து வரு­கி­றது. இத்­துடன், படங்­களின் துல்­லி­யத்தை அதி­க­ரிக்கும் வகையில் வெளி­யாகும், மேம்­பட்ட திறன் கொண்ட மொபைல்­போன்­களும், இணைய பயன்­பாட்டை அதி­க­ரிக்கச் செய்து வரு­கி­றது. இது­போன்ற கார­ணங்­களால், 2020ல், இணைய பொரு­ளா­தாரம், இரு மடங்கு உயர்ந்து, 25 ஆயிரம் கோடி டாலரை எட்டும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)