வாலிபர்களை வசீகரிக்க முடியாத சமூக வலைதள விளம்பரங்கள்வாலிபர்களை வசீகரிக்க முடியாத சமூக வலைதள விளம்பரங்கள் ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.69 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.69 ...
புதிய உச்சத்தை தொட்டது சி.ஐ.ஐ., வணிக நம்பிக்கை குறியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2017
02:53

புதுடில்லி : நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி சூடு­பி­டிக்­கும் என, பல்­துறை நிறு­வ­னங்­கள் தெரி­வித்­ததை அடுத்து, ஜன., – மார்ச் வரை­யி­லான காலாண்­டில், சி.ஐ.ஐ., அமைப்­பின், ‘வணிக நம்­பிக்கை குறி­யீடு’ 64.1 புள்­ளி­க­ளாக உயர்ந்து, புதிய உச்­சத்தை தொட்­டுள்­ளது.
சி.ஐ.ஐ., எனப்­படும் இந்­திய தொழி­லக கூட்­ட­மைப்பு, பல்­வேறு துறை­க­ளைச் சேர்ந்த நிறு­வ­னங்­களின், வணி­கம், விரி­வாக்­கத் திட்­டங்­கள், முத­லீடு உள்­ளிட்­டவை தொடர்­பாக, காலாண்­டுக்கு ஒரு­முறை ஆய்வு மேற்­கொள்­கிறது. இந்த வகை­யில், இந்­தாண்டு, ஜன., – மார்ச் வரை­யி­லான காலாண்­டின், 98வது வர்த்­தக சூழல் ஆய்­வ­றிக்­கையை, சி.ஐ.ஐ., வெளி­யிட்­டுள்­ளது. நாட்­டின் பல்­வேறு பகு­தி­க­ளைச் சேர்ந்த, 200க்கும் அதி­க­மான குறு, சிறு, நடுத்­தர மற்­றும் பெரிய நிறு­வ­னங்­கள், இந்த ஆய்­வில் பங்­கேற்­றன. அவற்­றில், 63 சத­வீத நிறு­வ­னங்­கள், மதிப்­பீட்டு காலாண்­டில், விற்­பனை உய­ரும் என்ற எதிர்­பார்ப்­பால், வர்த்­தக சூழல் மேம்­படும் என, தெரி­வித்­துள்ளன. முந்­தைய அக்., – டிச., காலாண்­டில், 39 சத­வீத நிறு­வ­னங்­கள் மட்­டுமே, வர்த்­த­கம் வளர்ச்சி காணும் என, தெரி­வித்­தி­ருந்­தன. இதே காலத்­தில், புதிய ஆர்­டர்­கள் அதி­க­ரிக்­கும் என, தெரி­வித்த நிறு­வ­னங்­களின் பங்கு, 41 சத­வீ­தத்­தில் இருந்து, 60 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது.
ஏற்­று­மதி ஆர்­டர்­களில் மாற்­ற­மி­ருக்­காது என்ற போதி­லும், தொழில் வளர்ச்­சிக்கு, உள்­நாட்டு ஆர்­டர்­கள் கை கொடுக்­கும் என, 61.8 சத­வீத நிறு­வ­னங்­கள் கூறி­யுள்ளன.தற்­போ­தைய சூழ­லில், முத­லீ­டு­கள் அவ­சி­யம் என தெரி­வித்­துள்ள நிறு­வ­னங்­கள், மதிப்­பீட்டு காலாண்­டில், அவற்­றின் உற்­பத்தி அதி­க­ரிக்­கும் என, எதிர்­பார்ப்­ப­தாக கூறி­யுள்ளன.இந்த ஆய்­வில், 65 சத­வீத நிறு­வ­னங்­கள், மதிப்­பீட்டு காலாண்­டில், அவற்­றின் உற்­பத்தி திறன், 75 சத­வீத அள­விற்கு பயன்­ப­டுத்­தப்­பட வாய்ப்பு உள்­ள­தாக தெரி­வித்­துள்ளன; இது, 2016, அக்., – டிச., காலாண்­டில், 36 சத­வீ­த­மாக குறைந்து காணப்­பட்­டது.
உற்­பத்தி திறன் அதி­க­ரித்த போதி­லும், உள்­நாடு மற்­றும் வெளி­நா­டு­களில் முத­லீட்டு திட்­டங்­கள் எதை­யும் மேற்­கொள்­ளப் போவ­தில்லை என, பெரும்­பா­லான நிறு­வ­னங்­கள் கூறி­யுள்ளன.உள்­நாட்டு முத­லீ­டு­களை பொறுத்­த­வரை, அதி­க­ரிக்­கவோ, குறைக்­கவோ போவ­தில்லை என, 50 சத­வீத நிறு­வ­னங்­கள் தெரி­வித்­துள்ளன.அடுத்த ஆறு மாதங்­க­ளுக்கு, உள்­நாட்டு தேவைப்­பாடு குறை­வாக இருக்­கும் என்ற எதிர்­பார்ப்பு, சர்­வ­தேச பொரு­ளா­தார மந்­த­நிலை, விளை­பொ­ருட்­களின் விலை உயர்வு போன்­றவை தான் முக்­கிய கவலை என, பெரும்­பா­லான நிறு­வ­னங்­கள் தெரி­வித்­துள்ளன.
இந்த கருத்­துக்­களின் அடிப்­ப­டை­யில், பல காலாண்­டு­க­ளாக குறைந்து காணப்­பட்ட, ‘வணிக நம்­பிக்கை குறி­யீடு’ மதிப்­பீட்டு காலாண்­டில், 64.1 புள்­ளி­யாக, புதிய உச்­சத்தை எட்­டி­யுள்­ளது; இது, முந்­தைய, அக்., – டிசம்­பர் காலாண்­டில், 56.5 புள்­ளி­யாக இருந்­தது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)