பதிவு செய்த நாள்
16 ஏப்2017
01:57
புதுடில்லி : மத்திய அரசு, ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கில், ‘டார்கட் பிளஸ் ஸ்கீம்’ என்ற திட்டத்தை, 2004ல் அறிமுகப்படுத்தியது. இதன்படி, ஏற்றுமதி வளர்ச்சிக்கு ஏற்ப, நிறுவனங்கள் செலுத்திய வரியில், 5 சதவீதம், 10 சதவீதம் மற்றும் 15 சதவீதம் என்றளவில், திரும்ப வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், 2006ல், இந்த சலுகை, 5 சதவீதமாக குறைக்கப்பட்டு, அதன்பின், திட்டம் ரத்து செய்யப்பட்டது.இதனால் பாதிக்கப்பட்ட ஏற்றுமதி நிறுவனங்களின் வழக்கை விசாரித்த, சுப்ரீம் கோர்ட், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சலுகைப்படி, வரிச்சலுகை வழங்க வேண்டும் என, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் குழு, ‘டார்கட் பிளஸ் ஸ்கீம்’ திட்டத்தின் கீழ், ஏற்றுமதியாளர்களுக்கு, 2,700 கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.‘அரசின் முடிவு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம், ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும்’ என, ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|