பதிவு செய்த நாள்
16 ஏப்2017
01:58
புதுடில்லி : மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:உலக வங்கி, சர்வதேச அளவில், சுலபமாக தொழில் செய்யக் கூடிய நகரங்களை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில், ஆண்டுதோறும் குறியீட்டை வெளியிட்டு வருகிறது. இந்த குறியீட்டில், தற்போது, இந்தி யாவின் தலைநகரமான, டில்லியும், வர்த்தக தலைநகரமாக விளங்கும் மும்பையும் உள்ளன. இதில், மேலும் எட்டு முக்கிய நகரங்களை சேர்க்க வேண்டும் என, உலக வங்கியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.அதை ஏற்று, இந்தியாவின், 10 நகரங்களின் அடிப்படையில், சுலபமாக தொழில் செய்வதற்கான குறியீட்டை உருவாக்க, உலக வங்கி முன்வந்துள்ளது. அதிக நகரங்கள் இடம் பெறுவதால், குறியீட்டின் தரம் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.உலக வங்கியின் குறியீட்டின்படி, உலகளவில், சுலபமாக தொழில் செய்யும் நாடுகளில், இந்தியா, 130வது இடத்தில் உள்ளது. இதை, 90வது இடத்திற்கு கொண்டு செல்ல, மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|