பதிவு செய்த நாள்
16 ஏப்2017
01:58
பெங்களூரு : பிரபல தேடல் பொறி நிறுவனமான, ‘கூகுள்’ உணவுப் பொருட்களை, ‘ஆர்டர்’ செய்யவும், வீட்டு சேவைகளுக்கு ஆட்களை தேர்வு செய்யவும், பிரத்யேகமாக, ‘ஏரியோ’ எனும் மொபைல், ‘ஆப்’பை அறிமுகப்படுத்தி உள்ளது.இதன் மூலம், வாடிக்கையாளர்கள் மிகுந்த நம்பகத்தன்மை வாய்ந்த வெளிப்படையான சேவையை பெற முடியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.உணவுப் பொருட்கள் சேவைகளுக்காக, கூகுள் நிறுவனம், ‘பாசோஸ், பாக்ஸ் 8 மற்றும் பிரெஷ் மெனு’ நிறுவனங்களுடன் கூட்டு வைத்துள்ளது. ‘ஆப்’ வாயிலாக உணவுப் பொருட்களை, ‘ஆர்டர்’ செய்யலாம்; குறிப்பிட்ட நேரத்திற்குள் வினியோகம் செய்யப்படும்.வீட்டு சேவைகளுக்காக, ‘அர்பன் கிளாப்’ நிறுவனத்துடன், கூகுள் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம், எலக்ட்ரீஷியன், பிளம்பர், கார்பென்டர் உள்ளிட்ட, பல தரப்பட்ட ஊழியர்களின் சேவைகளை பெறலாம். இந்த சேவைகளுக்கான கட்டணத்தை, ‘ஆப்’ மூலமாகவே செலுத்தலாம். மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களில், இந்த சேவை ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|