பதிவு செய்த நாள்
16 ஏப்2017
01:59
புதுடில்லி : நாட்டில் உள்ள முக்கிய துறைமுகங்கள், வளர்ச்சிப் பணிக்காக, 50 ஆயிரம் கோடி ரூபாய் கடனை, அமெரிக்க டாலரில் வாங்க இருப்பதாக, மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.இது குறித்து, அவர் கூறியதாவது:இந்தியாவில், 12 முக்கிய துறைமுகங்கள் உள்ளன. நாட்டின் மொத்த சரக்குகளை கையாள்வதில், இந்த துறைமுகங்களின் பங்கு, 61 சதவீதமாக உள்ளது. கடந்த நிதியாண்டில், 67.34 கோடி டன் சரக்குகளை, இந்த துறைமுகங்கள் கையாண்டுள்ளன.முக்கிய துறைமுகங்களில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. அதற்கு தேவையான நிதியை, துறைமுகங்கள், வெளிநாடுகளில் இருந்து, அமெரிக்க டாலர் அடிப்படையில், கடனாக வாங்க முடிவு செய்துள்ளன. ஜவஹர்லால் நேரு துறைமுக பொறுப்பு கழகம், வெளிநாடுகளில் இருந்து, 40 கோடி டாலர் கடன் வாங்கியது.எண்ணுார் காமராஜர் துறைமுகம், 10 கோடி டாலர் நிதி திரட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதே போல், மற்ற துறைமுகங்களும் சேர்த்து, 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடன் வாங்க உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|