பதிவு செய்த நாள்
19 ஏப்2017
01:53
புதுடில்லி : முதலீடு மற்றும் பொது சொத்து நிர்வாக துறை செயலர் நீரஜ் குப்தா கூறியதாவது: மத்திய அரசு, ஐ.ஓ.சி., – செயில், என்.டி.பி.சி., – என்.எச்.பி.சி., – பி.எப்.சி., – ஆர்.இ.சி., – என்.எல்.சி., இந்தியா ஆகிய, ஏழு பொதுத் துறை நிறுவனங்களில், குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.இந்த விற்பனை மூலம், 34 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட முடியும் என, தெரிகிறது. பங்கு விற்பனையை நிர்வகிக்கும் வணிக வங்கிகள், வழக்கறிஞர்கள் ஆகியவற்றை தேர்வு செய்வதற்கு, விருப்பம் உள்ள நிறுவனங்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் கோருவது தொடர்பான பணி துவங்கியுள்ளது.
இது, பங்கு விற்பனைக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய மேற்கொள்ளப்படும், வழக்கமான நடைமுறை தான். அதனால், உடனடியாக, ஏழு பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை நடைபெற வாய்ப்பில்லை. மத்திய அமைச்சரவைக் குழு, ஏற்கனவே ஒப்புதல் அளித்த, 12 பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை தான், முதலில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|