பதிவு செய்த நாள்
19 ஏப்2017
01:54
புதுடில்லி : எவரெடி நிறுவனம், மின் விசிறி, எல்.இ.டி., லைட் உள்ளிட்ட புதிய மின் சாதனங்கள் விற்பனை மூலம், 500 கோடி ரூபாய் வருவாயை ஈட்ட திட்டமிடுகிறது.
எவரெடி இண்டஸ்ட்ரீஸ், பல ஆண்டுகளாக, ‘டிரை செல் பேட்டரி’ உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. தற்போது இந்நிறுவனம், புதிய மின் சாதனங்கள் விற்பனையின் மூலம் அதிகளவில் வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அம்ரிதான்சு கைத்தான் கூறியதாவது: எங்கள் நிறுவனம், கடந்த நிதியாண்டின், முதல் ஒன்பது மாத காலத்தில், 1,101.14 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டியது. ஒவ்வொரு நிறுவனமும், வளர்ச்சியை நோக்கி செல்ல தான் விரும்பும். எவரெடி, பேட்டரி மற்றும் டார்ச் லைட் மூலம் அதிக வளர்ச்சியை அடைய முடியாது. இதனால், மின் விசிறி, ஏர் பியூரிபையர், எல்.இ.டி., லைட் உள்ளிட்ட மின் சாதனங்கள் விற்பனையின் மூலம், 500 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடிவு செய்துள்ளது. அதில், நிறுவனத்தின் மொத்த விற்பனையில், எல்.இ.டி., லைட் பங்கு, 400 கோடி ரூபாயாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மற்ற மின் சாதனங்களின் பங்கு, 100 கோடி ரூபாயாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|