பதிவு செய்த நாள்
20 ஏப்2017
00:08
ஐதராபாத் : கோத்ரெஜ் குழுமத்தின் தலைவரும், இந்திய தொழிலக கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான அதி கோத்ரெஜ் கூறியதாவது: இந்தியாவில், மின்னணு தொழில்நுட்பம் வாயிலாக நடைபெறும் சில்லரை விற்பனை மற்றும் நவீன பொருட்களின் சில்லரை விற்பனையில், போதிய முன்னேற்றம் இல்லை என்பது, என் கருத்து. இதில், குறிப்பாக, நுகர்பொருட்கள் துறையை குறிப்பிடலாம்.
அதே சமயம், இத்துறையின் விற்பனையில், மளிகை பொருட்கள் பிரிவின் பங்கு, 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்தியாவில், ஒருசில துறைகளில் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஒட்டுமொத்தமாக, நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுவது தவறு.
தொழில் நிறுவனங்கள், ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. குறிப்பாக, அமைப்பு சாரா துறையில், எண்ணற்ற வேலைவாய்ப்புகள் பெருகியுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|