பதிவு செய்த நாள்
20 ஏப்2017
00:09
புதுடில்லி : கணினி நாசகாரர்கள், இணைய தொடர்பு உள்ள, ஒரு நிறுவனத்தின் பிரின்டர் மற்றும் இதர சாதனங்களின் மூலமாக, முக்கிய தகவல்களை திருட வாய்ப்புள்ளதாக, எச்.பி., எனப்படும் ஹவ்லட் பேக்கர்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.
பொதுவாக, ஒரு நிறுவனம், கணினிகள் மற்றும் அவற்றை ஒருங்கிணைக்கும், ‘சர்வர்’ சாதனங்கள் ஆகியவற்றின் பாதுகாப்பிற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, ஆன்லைன் மூலம், எந்த இடத்தில் இருந்தும் ஒரு நிறுவனத்தின் பிரின்டரை இயக்கி, ஆவணங்களை அச்சடித்துக் கொள்ள முடியும். இந்த வசதியால், கணினி நாசகாரர்கள் பிரின்டர்கள் மூலம், ஒரு நிறுவனத்தின் அனைத்து தகவல்களையும் திருட வாய்ப்பு உள்ளது. வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றில், இத்தகைய தகவல் திருட்டு நடைபெற்றுள்ளது. இதுபோன்ற தாக்குதல்களை தடுக்க, மேம்பட்ட தொழில்நுட்பத்தில், பாதுகாப்பான பிரின்டர்களை தயாரிக்க, உலகில் பிரின்டர் விற்பனையில் முதலிடத்தில் உள்ள, எச்.பி., முயற்சி மேற்கொண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|