பதிவு செய்த நாள்
20 ஏப்2017
00:11
புதுடில்லி : நுகர்வோர் மின்னணு பொருட்கள் வணிகத்தில் ஈடுபட்டுள்ள, தென் கொரியாவைச் சேர்ந்த, எல்.ஜி., நிறுவனம், இந்தியாவை மையமாக வைத்து, பிற நாடுகளுக்கு, அதன் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் இந்திய பிரிவின் நிர்வாக இயக்குனர், கி வான் கிம் கூறியதாவது: தென் கொரியா – சீனா இடையே, பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. அதே சமயம், தென் கொரியா – இந்தியாவுடனான நட்புறவு, மேலும் வலுவடைந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, இந்தியாவை மையமாக வைத்து, நிறுவனத்தின் தயாரிப்பு களை, பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளோம்.
ஏற்கனவே, புனே மற்றும் நொய்டா நகரங்களில் இருந்து, சவுதி, ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு, நிறுவனத்தின் தயாரிப்புகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும், இந்தியாவில், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி அமலாக உள்ளதால், வெளிப்படையான வரி விதிப்பு இருக்கும். நுகர்வோர் தேவைகள் மற்றும் குறைகளை கண்டறிந்து நிறைவேற்ற, நிறுவனம், குழு ஒன்றை அமைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|