இந்தியாவை மையமாக வைத்து ஏற்றுமதி செய்ய எல்.ஜி., திட்டம்இந்தியாவை மையமாக வைத்து ஏற்றுமதி செய்ய எல்.ஜி., திட்டம் ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 64.66 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 64.66 ...
வளர்ச்சியில் நம்பிக்கை உள்ள நிறுவனங்கள்; இந்தியாவுக்கு முதலிடம்: பி.டபிள்யு.சி., ஆய்வறிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2017
00:12

மும்பை : பிற நாடு­களை விட, இந்­தி­யா­வைச் சேர்ந்த தலைமை செயல் அதி­கா­ரி­கள், அடுத்த ஓராண்­டில், தங்­கள் நிறு­வ­னத்­தின் வளர்ச்சி அதி­க­ரிக்­கும் என, திட­மான நம்­பிக்­கை­யு­டன் உள்­ளது, ஆய்­வொன்­றில் தெரிய வந்­துள்­ளது.
பி.டபிள்யு.சி., நிறு­வ­னம், 79 நாடு­க­ளைச் சேர்ந்த, 1,379 நிறு­வ­னங்­களின் தலைமை செயல் அதி­கா­ரி­க­ளி­டம் ஆய்வு மேற்­கொண்­டது. இதில், இந்­தி­யா­வைச் சேர்ந்த, 106 நிறு­வ­னங்­களின் தலைமை செயல் அதி­கா­ரி­கள் பங்­கேற்று, கருத்து தெரி­வித்து உள்­ள­னர்.
இது தொடர்­பாக, பி.டபிள்யு.சி., வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை: நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி குறித்து, உறு­தி­யாக கணிக்க முடி­யாத சூழ­லும், புதிய தொழில்­நுட்ப மாற்­றங்­களும், இந்­திய நிறு­வ­னங்­க­ளுக்கு சவா­லாக உள்ளன. இந்த நிலை­யி­லும், ஆய்­வில் பங்­கேற்ற இந்­தி­யர்­களில், 71 சத­வீ­தம் பேர், அடுத்த ஓராண்­டில், தங்­கள் நிறு­வ­னத்­தின் வரு­வாய் வளர்ச்சி அதி­க­ரிக்­கும் என, மிகுந்த நம்­பிக்­கை­உ­டன் தெரி­வித்து உள்­ள­னர்.
இந்த நம்­பிக்கை, உல­க­ள­வில், 38 சத­வீ­த­மா­க­வும், சீனா மற்­றும் பிரே­சி­லில், முறையே, 35 மற்­றும் 57 சத­வீ­த­மா­க­வும் உள்­ளது. பெருகி வரும் நகர்ப்­பு­றங்­களும், அதி­க­ரித்து வரும் மக்­களின் செல­வ­ழிப்பு வரு­வா­யும், இந்­திய நிறு­வ­னங்­க­ளுக்கு நம்­பிக்­கை­யூட்­டு­வ­தாக உள்ளன. மேலும், பொருட்­க­ளுக்­கான தேவைப்­பாடு உயர்ந்து வரு­வ­தும், அர­சின் சீர்­தி­ருத்­தங்­கள் தொட­ரும் என்ற எதிர்­பார்ப்­பும், அதி­க­ரித்து வரும் அன்­னிய நேரடி முத­லீ­டு­களும், தங்­கள் வளர்ச்­சிக்கு உத­வும் என, இந்­திய நிறு­வ­னங்­கள் நம்­பு­கின்றன.
அதே சம­யம், திற­மை­யான வல்­லு­னர்­க­ளுக்கு உள்ள பற்­றாக்­குறை, உட­னுக்­கு­டன் மாறும் தொழில்­நுட்­பங்­கள், போதிய அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­கள் இல்­லா­தது, அள­விற்கு அதி­க­மான கட்­டுப்­பா­டு­கள் ஆகி­யவை, சவா­லாக உள்­ள­தாக, தலைமை செயல் அதி­கா­ரி­கள் தெரி­வித்து உள்­ள­னர்.பணி­யா­ளர்­கள், ‘ரோபோ’ எனப்­படும், இயந்­தி­ரங்­க­ளு­டன் இணைந்து செயல்­ப­டு­வ­தால் கிடைக்­கும் நன்­மை­கள் குறித்து ஆராய்­வ­தாக, 56 சத­வீ­தம் பேர் தெரி­வித்து உள்­ள­னர்; அவர்­களில், 67 சத­வீ­தத்­தி­னர், அடுத்த ஓராண்­டில், கூடு­தல் பணி­யா­ளர்­களை நிய­மிக்க திட்­ட­மிட்டு உள்­ள­தாக கூறி­யுள்­ள­னர்.
புதிய மாற்­றம்இந்­திய நிறு­வ­னங்­களின் வரு­வாய் வளர்ச்சி குறித்து, தலைமை செயல் அதி­கா­ரி­கள் தொடர்ந்து நம்­பிக்கை தெரி­வித்து வரு­கின்­ற­னர். ஏற்ற, இறக்­க­முள்ள வர்த்­த­கச் சூழ­லில், அவர்­களின் நம்­பிக்கை, இந்­தியா, புதிய மாற்­றத்­திற்கு தயா­ராகி வரு­வ­தற்­கான அறி­கு­றி­யாக தென்­ப­டு­கிறது. நிறு­வ­னங்­கள், புதிய தொழில்­நுட்­பங்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளித்­தா­லும், அவற்­றுக்கு, தனித்­து­வ­மிக்க வல்­லு­னர்­க­ளுக்­கான தேவை, தொடர்ந்து இருந்து வரு­கிறது. இயந்­தி­ர­ம­ய­மாகி வரும் இன்­றைய தொழில் உல­கில், அத்­த­கைய வல்­லு­னர்­க­ளுக்­கான தேவை, மேலும் அதி­க­ரிக்­கும்.
-சியாம்­லால் முகர்ஜி, தலை­வர், பி.டபிள்யு.சி., இந்­தியா

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)