பதிவு செய்த நாள்
20 ஏப்2017
18:00
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் ஆரம்பித்து உயர்வுடனேயே நிறைவுற்றுன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம், கச்சா எண்ணெய் விலை மீண்டிருப்பது மற்றும் ரூபாயின் மதிப்பு உயர்ந்தது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் முடிந்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 85.82 புள்ளிகள் உயர்ந்து 29,422.39-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 32.90 புள்ளிகள் உயர்ந்து 9,136.40-ஆகவும் முடிந்தன. சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 21 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 9 நிறுவன பங்குகள் சரிந்தும் முடிந்தன. ஒட்டுமொத்த பங்குவர்த்தகத்தில் 1829 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 1040 நிறுவன பங்குகள் சரிந்தும், 166 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|