அசோக் லேலாண்டு நிறுவனத்தின் 3 நாள் சர்­வ­தேச கண்­காட்சிஅசோக் லேலாண்டு நிறுவனத்தின் 3 நாள் சர்­வ­தேச கண்­காட்சி ... நிறுவன வழக்கு: ‘செபி’ வலைதளத்தில் வெளியிட முடிவு நிறுவன வழக்கு: ‘செபி’ வலைதளத்தில் வெளியிட முடிவு ...
இரு­சக்­கர வாகன விற்­பனை நிறுத்­தம்; ஆட்டோ முக­வர்­கள் போராட்­டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2017
23:53

மும்பை : பஞ்சாபில், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின், 200க்கும் மேற்பட்ட துணை முகவர்கள், புதிய, ‘பாரத் ஸ்டேஜ் – 4’ விதிமுறையால், தேங்கியுள்ள இருசக்கர வாகனங்களுக்கு, நஷ்ட ஈடு கேட்டு, மூன்றாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த, 5ம் தேதி, பஜாஜ் நிறுவனம், பழைய, ‘பாரத் ஸ்டேஜ் – 3’ விதிமுறைப்படி தயாரிக்கப்பட்ட வாகனங்களை திரும்ப பெற்றுக் கொள்வதாக உறுதியளித்து இருந்தது. அதன்படி நடக்காததால், துணை முகவர்கள், ஏப்., 18 முதல், கடைகளை அடைத்துவிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இத்தகவலை, இந்நிறுவனம் மறுத்துள்ளது.
இது குறித்து, பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின், மோட்டார் சைக்கிள் வணிகத்தின் தலைவர் எரிக் வாஸ் கூறுகையில், ‘‘துணை முகவர்கள் போராட்டம் நடத்துவதாக, வெளியான தகவல் வெறும் வதந்தியே. பிரதான முகவர்களிடம் எந்தவொரு பிரச்னையும் இல்லை. ஒருசில, துணை முகவர்களிடம் பிரச்னை இருக்கலாம்,’’ என்றார்.
கடந்த மாதம், சுப்ரீம் கோர்ட், ‘பாரத் ஸ்டேஜ் – 3’ வாகனங்களை, ஏப்., 1 முதல் விற்பனை செய்ய, தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், பாரத் ஸ்டேஜ் குறித்த தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாத காரணத்தினால், கடந்த, 17ம் தேதியிலிருந்து, பல நிறுவனங்களின் வாகனங்கள் பதிவு செய்வது நிறுத்தப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)