21 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பும் எழுச்சி21 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பும் எழுச்சி ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 சரிவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 சரிவு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குச்சந்தைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2017
17:57

மும்பை : கடந்த இருதினங்களாகவே இந்திய பங்குச்சந்தைகள் அதிகளவில் ஏற்றம் கண்டு வந்த நிலையில் இன்று, இன்னும் அதிரடியாக உயர்ந்ததுடன் புதிய உச்சத்தை எட்டி வரலாறு படைத்தன. இன்றைய வர்த்தகம் துவங்கும்போதே சென்செக்ஸ் 30,030.80 புள்ளிகளாக ஆரம்பித்தது. இதற்கு முன் 2015 ம் ஆண்டு மார்ச் 4 ம் தேதி 30,024 புள்ளிகளை தொட்டதே சென்செக்சின் அதிகபட்ச சாதனையாக கருதப்பட்டது. தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டது.தொடர்ந்து சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 21 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வுடன் காணப்பட்டதாலும், பிரான்ஸ் தேர்தலின் முதல் சுற்றில் ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளதன் காரணமாகவும், வால் ஸ்ட்ரீட் 3வது நாளாக தொடர்ந்து உச்சத்தை எட்டியதாலும், ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட உயர்வு, அந்நிய முதலீடுகள் அதிகளவில் வந்ததன் காரணமாகவும், தலைநகர் டில்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றதாலும் இன்றைய வர்த்தகம் நாள் முழுக்க அதிக ஏற்றத்துடன் இருந்ததுடன் புதிய சாதனையையும் எட்டின.வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 190.11 புள்ளிகள் உயர்ந்து 30,133.35 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 45.25 புள்ளிகள் உயர்ந்து 9,351.85-ஆகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. சென்செக்ஸ் மட்டுமல்லாது நிப்டியும் நேற்றைய உச்சமான 9,306.60 புள்ளிகள் என்ற சாதனையையும் முறியடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)