பதிவு செய்த நாள்
27 ஏப்2017
00:40
மும்பை : மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ குறியீடு, நேற்று, வர்த்தகத்தின் இறுதியில், இதுவரை இல்லாத வகையில், 30,133.35 புள்ளிகளை எட்டி, புதிய சாதனை படைத்துள்ளது. வர்த்தகத்தின் இடையே, சென்செக்ஸ், 30,167.09 புள்ளிகள் வரை உயர்ந்தது.
கடந்த, மார்ச் 4ல், சென்செக்ஸ், முதன் முறையாக, 30 ஆயிரம் புள்ளிகளை தாண்டி, 30,024.74 புள்ளிகளில் நிலை கொண்டது. அதன் பின், சரிவை சந்தித்த சென்செக்ஸ், நேற்று முன்தினம், 29,943.24 புள்ளிகளில் நிலை பெற்று இருந்தது. நேற்று நடைபெற்ற பங்கு வர்த்தகத்தின் இறுதியில், சென்செக்ஸ், 190.11 புள்ளிகள் அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியது.
தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’ குறியீடு, நேற்று முன்தினம், முதன் முறையாக, 9,300 புள்ளிகளை தாண்டியது. நேற்று, பங்கு வர்த்தகத்தின் இறுதியில், இக்குறியீடு, 45.25 புள்ளிகள் அதிகரித்து, முதன்முறையாக, 9,351.85 புள்ளிகளில் நிலை பெற்றது. நிறுவனங்களின் நான்காவது காலாண்டு முடிவுகள் சிறப்பாக உள்ளதும், ரூபாய் மதிப்பு உயர்வும், அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு அதிகரிப்பும், பங்குச் சந்தை ஏற்றத்திற்கு வழி வகுத்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|