பதிவு செய்த நாள்
28 ஏப்2017
23:53
புதுடில்லி : அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம், சர்வதேச வர்த்தகம் மற்றும் செலவழிப்பு குறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: ஆய்வில் பங்கேற்ற, இந்திய நிறுவனங்களின் செயல் தலைவர்களில், 67 சதவீதம் பேர், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நன்கு இருக்கும் என, தெரிவித்து உள்ளனர். அதனால், இந்தாண்டு, மிதமான அளவில், முதலீடுகளையும், செலவுகளையும் அதிகரிக்க உள்ளதாக கூறியுள்ளனர்.
மூத்த நிதி செயலர்களில், 77 சதவீதத்தினர், கடந்த ஆண்டை விட, இந்தாண்டு, பணியாளர் எண்ணிக்கையை அதிகரிக்கவும், ஹார்டுவேர் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு கூடுதலாக செலவிடவும் உள்ளதாக தெரிவித்து உள்ளனர். நாடு மின்னணு மயமாகி வருவதால், டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கு அதிகம் செலவிட நிறுவனங்கள் விரும்புகின்றன. அதனால், நிறுவனங்கள் செலவில், தகவல் தொழில்நுட்பத் துறை முதலிடத்தை பிடித்துள்ளது. வர்த்தகத்தில் ஸ்திரமாக காலுான்ற, ஏற்றுமதியும் அவசியம் என்பதால், ஏற்றுமதி தொடர்பான முதலீடுகளை அதிகரிக்க, பல நிறுவனங்கள் திட்டமிட்டு உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|