பதிவு செய்த நாள்
28 ஏப்2017
23:54
மும்பை : இருசக்கர வாகனங்கள் விற்பனைக்கு பிந்தைய சேவை மற்றும் வாடிக்கையாளர்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் நிறுவனங்களில், டி.வி.எஸ்., மோட்டார்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளது.
இது குறித்து, ஜே.டி., பவர் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: முக்கிய, 45 நகரங்களைச் சேர்ந்த, 7,310 இருசக்கர வாகன உரிமையாளர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த பின் அளிக்கும் சேவையிலும், வாடிக்கையாளர்களிடம் இணக்கமான போக்கை கடைபிடிப்பதிலும், டி.வி.எஸ்., மோட்டார்ஸ் நிறுவனம், 782 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில், 749 புள்ளிகளை பெற்று, ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனம் உள்ளது.
ஒட்டுமொத்த அளவில், வாடிக்கையாளர் சேவை, சராசரியாக, 746 புள்ளிகள் என்றளவில் உள்ளது. இதில், ஹீரோ மோட்டோ கார்ப்பரேஷன், ராயல் என்பீல்டு நிறுவனங்கள், முறையே, 743 மற்றும் 735 புள்ளிகளை பெற்றுள்ளன. வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவதில், வாகன நிறுவனங்களின் முகவர்கள், முக்கிய பங்கு வகிக்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|