பதிவு செய்த நாள்
28 ஏப்2017
23:55
சியோல் : கியா மோட்டார்ஸ் நிறுவனம், ஆந்திராவில் அமைய இருக்கும் தொழிற்சாலையில், 2019 இறுதியில், உற்பத்தியை துவக்க திட்டமிட்டு உள்ளது.
ஹூண்டாய் குழுமத்தைச் சேர்ந்த, கியா மோட்டார்ஸ் நிறுவனம், ஆந்திராவில் தொழிற்சாலை ஒன்றை அமைக்க உள்ளது. இதற்காக, ஆந்திர அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன் அடிப்படையில், புதிதாக அமைய இருக்கும் ஆலைக்காக, 7,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது. இந்த முதலீட்டை, நடப்பு நிதியாண்டின் இறுதி காலாண்டின் போது செய்யும் எனவும், உற்பத்தி, 2019 இறுதியில் துவங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொழிற்சாலையில், கியா மோட்டார்ஸ், எஸ்.யு.வி., மற்றும் செடான் ரக கார்களை தயாரிக்க இருக்கிறது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைவர் ஹான்வூ பார்க் கூறியதாவது: வரும், 2020ல், கார் சந்தையில், உலகளவில் மூன்றாவது இடத்தை, இந்தியா பிடிக்கும். இந்தியாவில், திறன்மிகுந்த ஊழியர்கள் இருப்பதாலும், விரைவான வினியோக கட்டமைப்பு இருப்பதாலும் தொழிற்சாலை துவக்க முடிவு செய்தோம். இந்தியாவுக்காக, இங்கு பிரத்யேகமாக கார்கள் தயாரிக்கப்பட உள்ளன. 2019 இறுதியில், அங்கு உற்பத்தி துவங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உலகளவில், கியா மோட்டார்ஸ், ஆண்டுக்கு, 30 லட்சம் கார்களை தயாரித்து வருகிறது. ஹூண்டாய் ஆண்டுக்கு, 50 லட்சம் கார்களை தயாரிக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|